பகவந்தராவ் அன்னாபாவ் மண்ட்லோய் | |
---|---|
2வது மத்தியப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் 1 சனவரி 1957 – 30 சனவரி 1957 | |
முன்னையவர் | இரவிசங்கர் சுக்லா |
பின்னவர் | கைலாசு நாத் கட்சு |
பதவியில் 12 மார்ச் 1962 – 29 செப்டம்பர் 1963 | |
முன்னையவர் | கைலாசு நாத் கட்சு |
பின்னவர் | துவாரக பிரசாத் மிசுரா |
சட்டமன்ற உறுப்பினர் மத்தியப்பிரதேசம் | |
பதவியில் 1957–1967 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | காண்டுவா, மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா, பிரித்தானிய இந்தியா | 15 திசம்பர் 1892
இறப்பு | 3 நவம்பர் 1977 | (அகவை 84)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
கல்வி | இளங்கலை, LLB |
As of 1 June, 2017 மூலம்: ["Profile - Bhagwantrao Mandloi". Madhya Pradesh Vidhan Sabha.] |
பகவந்தராவ் அன்னாபாவ் மண்ட்லோய் (Bhagwantrao Mandloi)(15 திசம்பர் 1892 - 3 நவம்பர் 1977), என்பவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். இவர் காண்டுவாவில் பிறந்தார். இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூசண் விருதினைப் பெற்றவர் ஆவார்.[1]
இவர் 1 சனவரி 1957 முதல் 30 சனவரி 1957 வரையிலும், 12 மார்ச் 1962 முதல் 29 செப்டம்பர் 1963 வரையிலும் இரண்டு முறை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார். 1957 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பிரிக்கப்படாத மத்தியப் பிரதேச சட்டப் பேரவையின் காண்டுவா[2] சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.