படே பதே அலி கான் | |
---|---|
பிறப்பு | 1935 சாம்சௌராசி கிராமம், ஹோசியார்பூர் மாவட்டம், பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா) |
இறப்பு | 4 சனவரி 2017 (வயது 82) இஸ்லாமாபாத், பாக்கித்தான் |
இசை வடிவங்கள் | இந்திய பாரம்பரிய இசை, கியால் பாடுதல் |
தொழில்(கள்) | பாடுதல் |
இசைத்துறையில் | 1945–2016 |
உஸ்தாத் படே பதே அலி கான் (Bade Fateh Ali Khan) (1935 - 4 சனவரி 2017) இவர் பாக்கித்தானில் கியால் பாடகர்களில் முதன்மையானவர். மேலும் பாட்டியாலா கரானாவின் (பாடும் பாணி) ஒரு முன்னணி நிபுணர். 1974 ஆம் ஆண்டில் (1932-1974) அமானத் அலிகானின் திடீர் மற்றும் எதிர்பாராத மரணம் வரை பாக்கித்தானிலும் இந்தியாவிலும் மகத்தான கௌரவத்தையும் வெற்றிகளையும் பெற்று பாடும் இரட்டையர்களான அமானத் அலி கான் மற்றும் பதே அலி கான் ஆகியோரில் இளையவராவர். [1] [2]
பதே அலி 1935 இல் பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூர் மாவட்டம் சாம்சௌராசி என்ற கிராமத்தில் பிறந்தார். [3] [1] இவரது மூத்த சகோதரர் அமானத் அலியுடன், காலனித்துவ பிரிட்டிசு இந்தியாவில் சுதேச மாநிலமான பாட்டியாலாவின் ஆதரவில் ஒரு புகழ்பெற்ற பாடகரான இவர்களின் தந்தை அக்தர் உசேன் கான் என்பவரிடம் பயிற்சி பெற்றார். இவர்களின் தாத்தா அலி பக்ச் ஜர்னைலும் இதே அவையில் பணியாற்றினார். பாட்டியாலா கரானா 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இவரது தாத்தா மியான் கல்லுவால் நிறுவப்பட்டது. இவர் கடைசி முகலாய பேரரசர் பகதூர் ஷா சபாரின் அரசவை இசைக்கலைஞர்களின் தில்லி கரானாவின் மிர் குதுப் பக்ச் தான்ரசு கானிடமிருந்து பாரம்பரிய இசைப் பயிற்சி பெற்றார். [4]
இவர்கள் இருவரும் 1945 ஆம் ஆண்டில் லாகூரில் ஒரு புகழ்பெற்ற அறிமுகத்தை மேற்கொண்டிருந்தனர். பண்டிட் ஜீவன்லால் மட்டூ என்பவரால் ஆதரிக்கப்பட்டனர். 27 வயதான அமானத் அலியும், 14 வயதான பதே அலியும் 1949 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த அனைத்து வங்காள இசை மாநாட்டில் தங்களது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். [4]
அமனாத் அலி - பதே அலி பிரிக்கப்படாத பிரித்தானிய இந்தியாவில் பதின்பருவத்தில் இருந்தபோது பிரபலங்கள் ஆனார்கள். மேலும் இவர்களின் மிக உயர்ந்த அங்கீகாரத்தைப் பெற்றனர். பாக்கித்ஸ்தான் குடியரசுத் தலைவர்இவர்களுக்கு 1969 ஆம் ஆண்டில் செயல்திறன் பதக்கத்தை வழங்கினார். "படே" (மூத்தவர்) என்ற முன்னொட்டு பதே அலியின் பெயருடன் இணைக்கப்பட்டது. இதே போன்ற பெயர்களைக் கொண்ட இளைய பாக்ததானிய இசைக்கலைஞர்கள், முற்றிலும் மாறுபட்ட இசை வகைகளுடன் அலைகளை உருவாக்கத் தொடங்கினர்.
1947 இல் இந்தியா பிரிக்கப்பட்டபோது வளர்ந்து வரும் இவர்களின் வாழ்க்கை வியத்தகு முறையில் மாறியது. மேலும் குடும்பம் பாக்கித்தானுக்கு குடிபெயர விரும்பியது. தங்கள் புதிய வீட்டில் வறுமையை முறியடித்து, இருவரும் பதின்ம வயதிலேயே, துணைக் கண்டத்தின் முன்னணி பாடகர்களிடையே தங்களது சரியான இடத்தைப் பெறுவதற்காக திரும்பிச் சென்றனர். 1974 ஆம் ஆண்டில் பதே அலி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆழ்ந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து இவர் பாக்கித்தானின் வானொலியில் மேற்பார்வையாளராக சேர்ந்தார்.
படே பதே அலி கான் 2016 தனது 82 வயதில் 4 சனவரி 2017 அன்று இறந்தார். [1]