பதினேழாம் இராமவர்மா (Rama Varma XVII) (1861 - 23 மே 1941) இவர் 25 மார்ச் 1932 முதல் 23 மே 1941 வரை கொச்சி இராச்சியத்தின் ஆட்சியாளராக இருந்தார்.[1]
பதினாறாம் இராம வர்மாவின் இறப்பிற்குப் பின் இவர்அரியணை ஏறினார். இவரது ஆட்சிக் காலத்தில் கொச்சி துறைமுகம் விரிவுபடுத்தப்பட்டது. மேலும், எர்ணாகுளம் உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது. இவர் மத மற்றும் ஆன்மீக விஷயங்களிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார்.
இராம வர்மா 23 மே 1941 அன்று கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள சொவ்வரையில் இறந்தார்.