பனை ஓலை விசிறித்தொண்டை ஓணான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | சீ. விசிரி
|
இருசொற் பெயரீடு | |
சீதானா விசிரி தீபக் 2016 |
பனை ஓலை விசிறித்தொண்டை ஓணான் (Sitana visiri-சீதானா விசிரி) என்பது சீதானா பேரினத்தினைச் சார்ந்த அகாமிடே பல்லி குடும்பச் சிற்றினமாகும். இது இந்தியாவில் தமிழ்நாடு பிராந்தியத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2][3]
சீதானா விசிரியின் சிற்றினப் பெயரானது பனை இலையில் கையால் தயாரிக்கப்படும் விசிறியைக் குறிக்கும். இந்த ஓணான் காணப்படும் பகுதியின் மொழியான தமிழ் மொழி வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இந்தச் சிற்றினத்தின் அசைதாடி பனை ஓலை விசிறியை ஒத்திருப்பதால் இப்பெயர் பெற்றது.[2]
பரந்த நீல நிறத்தால் சூழப்பட்ட ஒரு பெரிய ஆரஞ்சு புள்ளியுடன் வலுவான அலைவடிவ அசை தாடியினைக் கொண்டு இப்பேரினத்தின் பிற சிற்றினங்களிலிருந்து வேறுபடுகிறது.[4] சீ. விசிரியின் அசைதாடி உடற்பகுதியில் 56% வரை நீண்டுள்ளது. இது சீதானா பாண்டிசெரியானா, சீ. பாகிரி மற்றும் சீ. தேவகை ஆகியவற்றை விட விகிதாசார அளவில் பெரியது.[4] சீ. விசிரி, சீ. பாண்டிசெரியானா உட்கோட்டு இனங்களிலிருந்து நீளத்தின் அடிப்படையில் வேறுபடுகிறது.[4]
இந்தியாவில் தமிழ்நாடு பகுதியில் காணப்படும் சீதானா விசிரி, கடலோர மணல் குன்றுகள், புல்வெளிகள், சமவெளிகள் மற்றும் சீமைக் கருவேலம் காணப்படும் பகுதிகளில் அதிக அளவில் வாழ்கிறது.[2] சீ. விசிரி, யூட்ரோபிசு கரினாட்டா, யூட்ரோபசு பிப்ரோனி மற்றும் கலோட்சு வெர்சிகலர் ஆகியவற்றுடன் ஒத்த பகுதிகளில் காணப்படுகிறது.[2] சி. விரிசி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் விலங்காகும். இவை இலையுதிர்காலத்தில் (செப்டம்பர் மற்றும் அக்டோபர்) இனப்பெருக்கம் செய்யும்.[2]