பரசுராம் திரியம்பக் குல்கர்னி | |
---|---|
5வது பேஷ்வா மற்றும் பிரதிநிதி, மராத்தியப் பேரரசு | |
ஆட்சியாளர் | சத்திரபதி இராஜாராம் |
முன்னையவர் | புதிய பதவி (பேஷ்வா பாகிரோஜி பிங்களே) |
பின்னவர் | சிறீபாதராவ் பந்த் பிரதிநிதி பாலாஜி விஸ்வநாத் பேஷ்வா) |
அவுந்து ஆளுநர் | |
பின்னவர் | சினீவாச ராவ் பரசுராம் பந்த் பிரதிநிதி |
விசால்காட் ஆளுநர் | |
பின்னவர் | கிருஷ்ணராவ் பந்த் பிரதிநிதி[1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1660 கின்ஹய், சாத்தாரா மாவட்டம், மகாராட்டிரா |
இறப்பு | 1718 அவுந்த், சதாரா, சாத்தாரா மாவட்டம், மகாராட்டிரா |
பரசுராம் திரியம்பக் குல்கர்னி ('Parshuram Trimbak Kulkarni) (பிறப்பு:1660 – இறப்பு:1718) இவரை பரசுராம் பந்த் பிரதிநிதி என்று அழைப்பர். மராத்தியப் பேரரசர்கள் சத்திரபதி இராஜாராம் மற்றும் தாராபாய் ஆட்சிக் காலத்தில் பரசுராம் பந்த் பேஷ்வா மற்றும் பிரதிநிதி பதவிகளுடன் இருந்தார்.[2] 27 ஆண்டுகள் நடைபெற்ற முகலாய-மராத்தியப் போர்களால் பரசுராம் திரியக்பக் பந்த் பெரிதும் அறியப்படுகிறார். இவர் விசால்காட் மற்றும் அவுந்து இராஜ்ஜியங்களை நிறுவி அதன் ஆளுநராக இருந்தார்.[3]