பரம்பா மாநிலம் ବଡମ୍ବା ରାଜ୍ୟ | |||||
மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா) பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | |||||
| |||||
கொடி | |||||
![]() | |||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1305 | |||
• | இந்திய விடுதலை இயக்கம் | 1948 | |||
பரப்பு | |||||
• | 1892 | 368 km2 (142 sq mi) | |||
Population | |||||
• | 1892 | 29,772 | |||
மக்கள்தொகை அடர்த்தி | 80.9 /km2 (209.5 /sq mi) | ||||
தற்காலத்தில் அங்கம் | ஒடிசா, இந்தியா |
பராம்பா மாநிலம் (Baramba State) பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் காலத்தில் இந்தியாவின் மன்னர் ஆட்சி நடந்த பகுதிகளில் ஒன்றாகும். இதன் தலைநகரம் பாரம்பா நகரில் இருந்தது. கடைசி ஆட்சியாளர் 1948- ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாள் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தார். 1948 இல் ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தின் ஒரு பகுதியாக பரம்பா மாநிலம் ஆனது.
குடும்பத்தினரின் பதிவுகள் மற்றும் நீதிமன்றப் பதிவுகளின்படி, 1305 ஆம் ஆண்டில், சோன்கா மற்றும் மொஹுரி ஆகிய இரண்டு கிராமங்களை உள்ளடக்கிய நிலம், அப்போதைய கிழக்கு கங்கை பேரரசர் இரண்டாம் நரசிம்ம தேவாவால், மல்யுத்த வீரர் அடகேஷ்வர் ரவுத் என்பவருக்கு அவரது வீரத்தை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டபோது, பரம்பா மாநிலம் நிறுவப்பட்டது. [1] [2] [3] பரம்பா மன்னராட்சிப் பகுதியின் கடைசி ஆட்சியாளர் 1948 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாள் அன்று இந்திய ஒன்றியத்துடன் இணைவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார்.