பருவா சாகர்தால் ஏரி | |
---|---|
![]() 1882 இல் பருவா சாகர்தால் ஏரி | |
அமைவிடம் | உத்தரப் பிரதேசம் |
ஆள்கூறுகள் | 25°22′05″N 78°44′53″E / 25.368°N 78.748°E |
வகை | செயற்கை ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
பருவா சாகர்தால் ஏரி (Barua Sagar Tal) இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஜான்சி என்ற நகரத்திற்கு அருகில் பருவா சாகர்தால் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்த ஏரியானது 260 வருடங்களுக்கு முன்னால் ஓர்ச்சா பகுதியின் அரசரான ராஜா உதித் சிங் என்பவரால் சாலையை ஒரு பக்க தடுப்பாக கொண்டு கட்டப்பட்ட ஏரி ஆகும்.[1] இது கட்டப்பட்ட காலம் கிட்டத்தட்ட கிபி 1694 ஆக இருக்குமெனக் கருதப்படுகிறது. [2] இங்கு அழகான ஜராய்-கா-மத் என்ற கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்த புந்தேல்கண்ட் கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது.