வகை | நிகர்நிலைப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1964 |
Parent institution | பாரதி வித்தியா பீடம் |
வேந்தர் | சிவாஜிராவ் கதம் |
துணை வேந்தர் | முனைவர். எம் எம். சலுங்கே |
கல்வி பணியாளர் | 1600+ |
மாணவர்கள் | 23000+ |
அமைவிடம் | , , 18°27′29″N 73°51′20″E / 18.458076°N 73.855634°E |
இணையதளம் | www |
[1] |
பாரதி வித்தியா பீடம் நிகர்நிலைப் பல்கலைக்கழம் (Bharati Vidyapeeth) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் 1964-இல் நிறுவப்பட்டது. இதனை இந்திய அரசியல்வாதியும், கல்வியாளருமான பதங்கராவ் கதம் என்பவர் நிறுவினார். பாரதி வித்தியா பீடத்தில் 1600+ ஆசிரியர்களும், ஊழியர்களும் பணிபுரியம் பாரதிய வித்தியா பீடத்தில் 23,000+ மாணவர்கள் பயில்கிறார்கள்.
பல்கலைக்கழக மானியக் குழு 26 ஏப்ரல் 1996 அன்று 12 கல்லூரிகளைக் கொண்ட பாரதி வித்தியா பீடத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழமாக அங்கீகாரம் வழஙகியது. பாரதி வித்தியா பீடத்தின் வளாகங்கள் மகாராட்டிரா மாநிலத்தில் நவி மும்பை, சதாரா, சோலாப்பூர், கராத், பஞ்ச்கனி, கோலாப்பூர் மற்றும் புது தில்லியில் உள்ளது. மேலும் பாரதிய வித்தியா பீடம் 78 உயர்நிலைப் பள்ளிகளையும், 60 கலை, அறிவியல், வேளாண்மை, மருத்துவம், துணை மருத்துவம், இந்திய மருத்துவம், பொறியியல், வணிக மேலாண்மை, உணவக மேலாண்மை மற்றும் உணவுக் கலை கல்லூரிகளை நடத்துகிறது.