பாலா | |
---|---|
பிறப்பு | சூலை 11, 1966 நாராயணத்தேவன்பட்டி, உத்தமபாளையம் வட்டம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குனர் |
வாழ்க்கைத் துணை |
|
வலைத்தளம் | |
http://www.directorbala.com/ |
பாலா பழனிசாமி (Bala, பிறப்பு:சூலை 11, 1966) என்பவர் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் கல்வி பயின்றார்.இவர் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமான பிதாமகனில் நடித்த விக்ரம், நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
'இருட்டிண்ட ஆத்மா’னு ஒரு மலையாளச் சிறுகதை தந்த பாதிப்புதான் 'சேது’. ராமநாதபுரம் பகுதியில் பார்த்த அகதிகள் முகாம்தான் 'நந்தா’. ஜெயகாந்தனோட 'நந்தவனத்தில் ஒரு ஆண்டி’தான் 'பிதா மகன்’. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்’, ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்’, காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் எல்லாம் சேர்ந்து 'நான் கடவுள்’, ரெட் டீ’ நாவலைத்தான் 'பரதேசி' என்று ஒரு படத்துக்கான கதையை முடிவு செய்ததாக பாலா கூறுகிறார்.[1]