பாலி யாத்திரை, இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு பயணித்த பழங்கால ஒரிய கடற்பயணிகளை நினைவுகூரும் நிகழ்வாகும். இதை போய்த்த பந்தாணா என்றும் குறிப்பிடுகின்றனர்.[1] பண்டைக்காலத்தில் இந்தோனேசியாவின் பாலி, சுமாத்திரா, போர்னியோ உள்ளிட்ட இடங்களுக்குக் கடல்வழியாக ஒரியர்கள் பயணித்திருக்கின்றனர்.
குழந்தைகள் மகாநதியிலும், நீர்ப்பரப்பிலும் பேப்பர் கப்பல்களை விடுகின்றனர். மக்கள் பாரம்பரிய பாடல்களைப் பாடுகின்றனர்.