நிலை | நீதிமன்ற உத்தரவின்படி கலைக்கப்பட்டது |
---|---|
நிறுவுகை | 1927 |
செயலற்றது | 1960 |
தலைமையகம் | கேரளம், இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
தொழில்துறை | வங்கித்தொழில், நிதிச் சேவைகள் |
பாலை மத்திய வங்கி தென்னிந்தியாவின் கேரளத்தை தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவந்த இந்திய வணிக வங்கியாகும். 1927ஆம் ஆண்டில், சிறு கிராமத்தில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இவ்வங்கி, கேரளாவில் பெரிய வங்கியாக மட்டுமின்றி, கேரள அரசுக்கு அடுத்த அளவில் மிகப்பெரிய நிறுவனமாகவும், இந்தியாவில் செயற்படும் 94 மொத்த வங்கிகளில் 17ஆவது பெரிய வங்கியாகவும் வளர்ந்தது. 1960ஆம் ஆண்டில் பாரத ரிசர்வ் வங்கியால் கேரள உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் காரணமாக இவ்வங்கி கலைக்கப்பட்டது.[1]