பிராமணி ஆறு | |
---|---|
![]() பிராமணி ஆறு | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சார்க்கண்டு, மேற்கு வங்காளம் |
நகரம் | தும்கா, ராம்புராகத் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | கத்திகுண்டு, தும்கா, சந்தல் பர்கானா |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | துவாரகா ஆறு |
பிராமணி ஆறு (Brahmani River) என்பது இந்தியாவில் சார்க்கண்டு மற்றும் மேற்கு வங்காளத்தில் பாயும் ஒரு ஆறு ஆகும். இது துவாரகா ஆற்றின் கிளை ஆறாகும்.
பிராமணி ஆறு சார்க்கண்டில் உள்ள சந்தால் பர்கானாசில் உருவாகிறது. இதன் பின்னர் பிர்பூம் மாவட்டத்தில் பாய்கிறது. இது ராம்பூர்ஹாட் உட்பிரிவை இரண்டாகப் பிரிக்கிறது. பிராமணி இறுதியாக முர்டிதாபாத் மாவட்டத்தில் பாய்ந்து துவாரகா ஆற்றுடன் இணைகிறது.[1]
இது கூழாங்கற்கள் மற்றும் மஞ்சள் களிமண் நிறைந்த படுக்கைகள் கொண்ட ஒரு மலை நீரோடையாகும்.[2]
பிராமணி மீது பைதாரா தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதன் கொள்ளளவு 540,000 கன சதுர மீட்டர்கள் (440 acre⋅ft) ) ஆகும்.[3]