பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி Crown Colony of North Borneo | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1946–1963 | |||||||||||||||||||
நாட்டுப்பண்: God Save the King (1946–1952) God Save the Queen (1952–1963) | |||||||||||||||||||
![]() | |||||||||||||||||||
நிலை | பிரித்தானிய காலனி | ||||||||||||||||||
தலைநகரம் | செசல்டன் | ||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | ஆங்கிலம், பஜாவு, மூருட், சீனம், கடசான், டூசுன், சபா மலாய் | ||||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி காலனி | ||||||||||||||||||
அரசர் | |||||||||||||||||||
• 1946–1952 | ஆறாம் ஜோர்ஜ் | ||||||||||||||||||
• 1952–1963 | இரண்டாம் எலிசபெத் | ||||||||||||||||||
ஆளுநர் | |||||||||||||||||||
• 1946–1949 | எட்வர்டு துவினிங் | ||||||||||||||||||
• 1959–1963 | வில்லியம் கூடே | ||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | புதிய பேரரசுவாதம் | ||||||||||||||||||
• பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி காலனி | 15 சூலை 1946[1] | ||||||||||||||||||
16 அக்டோபர் 1947 | |||||||||||||||||||
31 ஆகத்து 1963[2][3] | |||||||||||||||||||
16 செப்டம்பர் 1963 | |||||||||||||||||||
நாணயம் | வடக்கு போர்னியோ டாலர், மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் | ||||||||||||||||||
| |||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | மலேசியா |
பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி (Crown Colony of North Borneo; மலாய்: Tanah Jajahan Mahkota Sarawak) என்பது 1946-ஆம் ஆண்டில், போர்னியோ தீவில் பிரித்தானிய முடியாட்சியின் (Crown Colony) கீழ் இருந்த ஒரு நிலப்பகுதியாகும்.
1946 சூலை 1-ஆம் தேதி வரையில், சரவாக் மாநிலத்தைத் தற்காலிகமாக நிருவாகம் செய்த பிரித்தானிய இராணுவ நிருவாகம் (British Military Administration - Borneo) கலைக்கப்பட்ட பிறகு, சரவாக் மாநிலத்தில் பிரித்தானிய சரவாக் முடியாட்சி நிறுவப்பட்டது.
1963 ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி மலேசியா கூட்டமைப்பு (Federation of Malaysia) உருவாக்கப்பட்டது. அதன் மூலம் பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி (Crown Colony of North Borneo) என்பது சபா மாநிலம் (State of Sabah) என்று புதிய பெயரைப் பெற்றது.
அப்போதைய பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தின் துணைத் தலைவராக (Vice-Chairman of BNBC) சர் சார்லசு செசல் (Sir Charles Jessel) என்பவர் இருந்தார். அவருடைய பெயர் செசல்டன் நகருக்கு வைக்கப்பட்டது.
பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் (British North Borneo Company என்பது வடக்கு போர்னியோ எனும் சபா மாநிலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பிரித்தானிய நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1881 நவம்பர் 1-ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
1888-ஆம் ஆண்டில் வடக்கு போர்னியோ பகுதி (இன்றைய சபா மாநிலம்) பிரித்தானிய பேரரசின் பாதுகாப்புப் பகுதியாக மாறியது. ஆனாலும் 1946-ஆம் ஆண்டு வரை வடக்கு போர்னியோவின் நிர்வாகம் முழுவதும், பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி அரசாங்கத்தால் (Crown Colony of North Borneo) ஏற்றுக் கொள்ளப்படும் வரையில், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனமே கவனித்துக் கொண்டது.[4]
இதற்கிடையில், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் 1890-இல் லபுவான் தீவை தற்காலிகமாக நிர்வாகம் செய்தது. பின்னர் இந்த லபுவான் பகுதி, நீரிணைக் குடியேற்றங்களின் (Straits Settlements) ஒரு பகுதியாக மாறியது.
1882-ஆம் ஆண்டில், பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு, சபாவை ஆட்சி செய்வதற்கான உரிமை கிடைத்து ஓர் ஆண்டு கழித்து, காயா தீவில் (Gaya Island) ஒரு புதிய குடியேற்றத்தை நிறுவியது.[5]
1963-ஆம் ஆண்டுக்கு முன்னர் சபா மாநிலம், செசல்டன் (Jesselton) என்று பொதுவாக அறியப்பட்டது. செசல்டன் என்பது இப்போதைய கோத்தா கினபாலு மாநகரைக் குறிப்பிடுவதாகும். 1967 டிசம்பர் 22-ஆம் தேதி, கோத்தா கினபாலு என சபா மாநில சட்டமன்றம் மாற்றம் செய்தது.[6]
1947-ஆம் ஆண்டிற்கு முன்னர், வடகிழக்கு போர்னியோவில் ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் ஆமைத் தீவுகள் (Turtle Islands), தாவி தாவி தீவுகள் (Tawi-Tawi Islands), மாங்சி தீவுகள் (Mangsee Islands) எனும் ஏழு தீவுகள் (British-Controlled Islands) இருந்தன.
1947 அக்டோபர் 16-ஆம் தேதி, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா (United States) ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் கீழ் அந்த ஏழு தீவுகளும் பிலிப்பீன்சு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன.[7][8]
அந்தத் தீவுகள் இப்போது பிலிப்பீன்சு நாட்டின் தென்மேற்கு தகலாகு (Southwestern Tagalog Region) மிமரோபா (Mimaropa) பிராந்தியம்; மற்றும் முசுலிம் மிண்டனாவோவின் பாங்சமோரோ தன்னாட்சிப் பகுதி (Bangsamoro Autonomous Region); ஆகியவற்றின் ஒரு பகுதியாக உள்ளன.