பிரெட்ரிக் வான் உர்ம்ப்

கிறிசுடோப் கார்ல் பிரெட்ரிக் வான் உர்ம்ப் (Christoph Carl Frederich von Wurmb-2 சூலை 1742 வோல்க்ராம்ஷௌசென்-மார்ச் 1781 பட்டாவியா) என்பவர் செருமனிய தாவரவியலாளர் ஆவார். இவரது அதிகாரப்பூர்வ பெயர் சுருக்கெழுத்து "உர்ம்ப்" ஆகும். இவர் வான் உர்ம்ப் என்ற உன்னத குடும்பத்தின் வழித்தோன்றலாக இருந்தார். ஒரு கட்டத்தில், இவரது மூத்த சகோதரர் லுட்விக் மற்றும் இவரும் ஒரே பெண்ணைக் காதலித்தனர். ஒரு நீண்ட முடிவிற்குப் பிறகு, தனது சகோதரருக்காகத் தனது காதலைக் கைவிட்டார். இவர் இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் ஆம்ஸ்டர்டாமுக்கும், பின்னர் நவீனக்கால ஜகார்த்தா பட்டாவியாவுக்கும் குடிபெயர்ந்தார். இவரது சகோதரர் பின்னர் கிறிஸ்டியன் வான் வெர்தெர்ன் என்ற பெண்ணை மணந்தார். இவரது சகோதரியின் மைத்துனர் பிரெடிரிக் சில்லர், இதைப் பற்றி ஒரு மகத்தான செயல் (Eine Grossmütige Handlang) எனும் சிறுகதையினை எழுதினார்,

உயிரியலில், இவர் பனை மரங்களின் வகைப்பாட்டியல் பங்களிப்பு மூலம் அறியப்படுகிறார்.[1] மற்றும் போர்னியோ ஒராங்குட்டான் பற்றியும் இவர் எழுதியுள்ளார்.[2]

கொல்சிகேசி குடும்பத்தில் உர்ம்பியா பேரினம் இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Orde der Palmboomen. In: Verhandelingen van het Bataviaasch Genootschap der Konsten en Weetenschappen, Band 1, 1781, pp 335 ff. (Digitalisat)
  2. Beschryving van de groote Borneoosche Orang Outang of de oost-indische Pongo. In: Verhandelingen van het Bataviaasch Genootschap der Konsten en Weetenschappen, Band 2, 1784,pp 245 ff. (Digitalisat)