பூபிலி ஜார்ஜ் வர்கீஸ் | |
---|---|
பிறப்பு | பர்மா | 21 சூன் 1927
இறப்பு | 30 திசம்பர் 2014 புது தில்லி, இந்தியா | (அகவை 87)
கல்வி | தி டூன் பள்ளி கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் |
பணி | இதழிகையாளர், இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரசின் முன்னாள் ஆசிரியர் |
பீ. ஜீ. வர்கீஸ் (பூபிலி ஜார்ஜ் வர்கீஸ், ஜூன் 21, 1927- 30 திசம்பர் 2014) என்பவர் ஒரு இதழிகையாளராகவும், தாளிகை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் விளங்கியவரவார். ரமன் மகசசே விருது பெற்றவர்.
டேராடூன் பள்ளியில் பயின்றார். பின்னர், தில்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் பொருளியல் கல்வி கற்றார். கேம்பிரிச்சில் திரினிட்டிக் கல்லூரியில் சேர்ந்து முதுநிலைப் பட்டம் பெற்றார்[1] .
முதலில் டைம்சு ஆப் இந்தியாவிலும், பின்னர் இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித் தாளிலும் பணியாற்றினார். இந்தியன் எக்சுபிரசு நிறுவனத்திலும் ஆசிரியராக இருந்தார்[2]. அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடி நிலையை எதிர்த்தார்[3] . மனித உரிமைகளுக்குச் சார்பாகச் செயற்பட்டார். செய்தித்தாள்கள் ஆசிரியப்பணி எழுத்துப்பணி அல்லாது சில நூல்களையும் எழுதினார்