பீகார் சட்டப் பேரவை | |
---|---|
17வது பீகார் சட்டப் பேரவை | |
![]() | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
தலைமை | |
இராசேந்திர அர்லேகர் 17 பெப்ரவரி 2023 முதல் | |
சட்டமன்ற செயலாளர் | படேஷ்வர் நாத் பாண்டே |
பேரவைத் தலைவர் | |
துணை பேரவைத் தலைவர் | |
அவைத் தலைவர் (முதலமைச்சர்) | |
அவை துணைத் தலைவர் (துணை முதலமைச்சர்) | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 243 |
![]() | |
அரசியல் குழுக்கள் | அரசு (134)
அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சிகள் (107)
காலி (2)
|
தேர்தல்கள் | |
First-past-the-post | |
அண்மைய தேர்தல் | அக்டோபர் - நவம்பர் 2020 |
அடுத்த தேர்தல் | அக்டோபர் - நவம்பர் 2025 |
கூடும் இடம் | |
![]() | |
பீகார் மாநில சட்டமன்றம், பட்னா, பீகார், இந்தியா | |
வலைத்தளம் | |
பீகார் சட்டப் பேரவை |
பீகார் சட்டப் பேரவை இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஈரவை பீகார் சட்டமன்றத்தின் கீழவை ஆகும். முதல் மாநில தேர்தல் 1952 இல் நடைபெற்றது.[4]
பீகார் பிரிவினைக்கு முன், ஒரு நியமன உறுப்பினர் உட்பட சட்டசபையில் மொத்த உறுப்பினர்களின் பலம் 331 ஆக இருந்தது. பிரிவினைக்குப் பிறகு, உறுப்பினர்கள் 243 ஆகக் குறைக்கப்பட்டன. சிறி கிருட்டிணா சின்கா அவையின் முதல் தலைவராகவும் , முதல் முதலமைச்சராகவும் ஆனார், அனுக்ரா நாராயண் சின்கா அவையின் முதல் துணைத் தலைவராகவும் முதல் துணை முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்ட பிறகு, பீகார் மற்றும் ஒரிசா தனி மாநிலங்களாக மாறியது. சட்டத்தின்படி ஈரவை கள் கொண்ட சட்டமன்றம் அறிமுகப்படுத்தப்பட்டது. 22 சூலை 1936 இல், முதல் பீகார் சட்ட மேலவை அமைக்கப்பட்டது. அதில் 30 உறுப்பினர்கள் இருந்தனர் மற்றும் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் தலைவராக இருந்தார். பீகார் சட்டமன்றத்தின் இரு அவைகளின் முதல் கூட்டு அமர்வு 22 சூலை 1937 இல் நடந்தது. பீகார் சட்டப் பேரவையின் பேரவைத் தலைவர் இராம் தயாலு சிங் தேர்வு செய்யப்பட்டார்.[6]
பீகார் சட்டப் பேரவை தொடங்கப்பட்ட மற்றும் கலைக்கப்பட்ட தேதிகள் பின்வருமாறு. ஒவ்வொரு சட்டப் பேரவைக்கும் முதல் அமர்வு தேதி மற்றும் பதவிக்காலம் முடிக்கும் தேதி ஆகியவை தொடக்க மற்றும் கலைப்பு தேதிகளில் இருந்து தேதிகளிலிருந்து (முறையே) வேறுபட்டிருக்கலாம்.
சட்டப் பேரவை | தொடக்கம் | கலைப்பு | நாள்கள் | பேரவைத் தலைவர் | அமைச்சரவை |
---|---|---|---|---|---|
இடைக்கால அரசு | 25 ஏப்ரல் 1946 | 19 மே 1952 | 2,041 | பிந்தேஸ்வரி பிரசாத் வர்மா | முதல் சிறி கிருட்டிணா சின்கா அமைச்சரவை |
1வது | 20 மே 1952 | 31 மார்ச் 1957 | 1,776 | இரண்டாவது சிறி கிருட்டிணா சின்கா அமைச்சரவை | |
2வது | 20 மே 1957 | 15 மார்ச் 1962 | 1,760 | மூன்றாவது சிறி கிருட்டிணா சின்கா அமைச்சரவை (1961 வரை) தீப் நாராயண் சிங் இடைக்கால அமைச்சரவை (17 நாள்கள்) முதல் பினோதானந்த் ஜா அமைச்சரவை (1961-62) | |
3வது | 16 மார்ச் 1962 | 16 மார்ச் 1967 | 1,826 | லக்ஷ்மி நாராயண் சுதன்ஷு | |
4வது | 17 மார்ச் 1967 | 26 பெப்ரவரி 1969 | 712 | தானிக் லால் மண்டல் | |
5வது | 26 பெப்ரவரி 1969 | 28 மார்ச் 1972 | 1,126 | இராம்நாராயண் மண்டல் | |
6வது | 29 மார்ச் 1972 | 30 ஏப்ரல் 1977 | 1,858 | ஹரி நாத் மிஸ்ரா | |
7வது | 24 சூன் 1977 | 17 பெப்ரவரி 1980 | 968 | திரிபுராரி பிரசாத் சிங் | |
8வது | 8 சூன் 1980 | 12 மார்ச் 1985 | 1,738 | இராதானந்தன் ஜா | |
9வது | 12 மார்ச் 1985 | 10 மார்ச் 1990 | 1,824 | சிவ சந்திர ஜா (1989 வரை)
ஹிதாயத்துல்லா கான் |
|
10வது | 10 மார்ச் 1990 | 28 மார்ச் 1995 | 1,844 | குலாம் சர்வார் | |
11வது | 4 ஏப்ரல் 1995 | 2 மார்ச் 2000 | 1,795 | தியோ நாராயண் யாதவ் | |
12வது | 3 மார்ச் 2000 | 6 மார்ச் 2005 | 1,830 | சதானந்த் சிங் | |
13வது | 7 மார்ச் 2005 | 24 நவம்பர் 2005 | 263 | உதய் நாராயண் சௌத்ரி | |
14வது | 24 நவம்பர் 2005 | 26 நவம்பர் 2010 | 1,829 | இரண்டாவது நிதிஷ் குமார் அமைச்சரவை | |
15வது | 26 நவம்பர் 2010 | 20 நவம்பர் 2015 | 1,821 | மூன்றாவது நிதிஷ் குமார் அமைச்சரவை (2010–14) ஜீதன் ராம் மாஞ்சி அமைச்சரவை (2014-15) நான்காவது நிதிஷ் குமார் அமைச்சரவை (2015-15) | |
16வது | 20 நவம்பர் 2015 | 14 நவம்பர் 2020[7] | 1,821 | விஜய் குமார் சவுத்ரி | ஐந்தாவது நிதிஷ் குமார் அமைச்சரவை (2015–17) ஆறாவது நிதிஷ் குமார் அமைச்சரவை (2017-20) |
17வது | 16 நவம்பர் 2020 | பதவியில் | 1621 | விஜய் குமார் சின்கா (9 ஆகத்து 2022 வரை)
அவத் பீகாரி சௌத்ரி (28 சனவரி 2024 வரை) நந்த் கிஷோர் யாதவ் (15 பெப்ரவரி 2024 முதல்)[8] |
ஏழாவது நிதிஷ் குமார் அமைச்சரவை (2020-22) எட்டாவது நிதிஷ் குமார் அமைச்சரவை (2022-2024) ஒன்பதாவது நிதிஷ் குமார் அமைச்சரவை (2024-தற்போது) |
பீகார் சட்டப் பேரவை நிரந்தரமான அமைப்பல்ல, கலைப்புக்கு உட்பட்டது. சட்டப் பேரவையின் பதவிக்காலம், விரைவில் கலைக்கப்படாவிட்டால், அதன் முதல் அமர்வுக்கு நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் ஆகும். சட்டப் பேரவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மூன்று அமர்வுகள் (நிதியறிக்கை அமர்வு, மழைக்கால அமர்வு, குளிர்கால அமர்வு) உள்ளன.
சட்டப் பேரவையின் அமர்வுகள் பேரவைத் தலைவர் தலைமையில் நடைபெறும் மற்றும் ஒரு மசோதா சாதாரண மசோதா அல்லது பண மசோதா என்பதை பேரவைத் தலைவர் சான்றளிக்கிறார். பொதுவாக அவர் வாக்களிப்பில் பங்கேற்க மாட்டார், ஆனால் அவர் வெற்றி-தோல்வியற்ற நிலையில் வாக்களிப்பார். பீகார் சட்டப் பேரவையின் தற்போதைய பேரவைத் தலைவராக நந்த் கிஷோர் யாதவ் உள்ளார்.[8] சட்டப் பேரவையில் செயலாளரின் தலைமையில் ஒரு செயலகம் உள்ளது. அவர் பேரவைத் தலைவரின் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளார். செயலாளரின் பணி பேரவைத் தலைவருக்கு உதவுவதாகும். படேஷ்வர் நாத் பாண்டே பீகார் சட்டப் பேரவையின் தற்போதைய செயலாளராக உள்ளார்.