புனித பிறிஜட் கன்னியர் மடம் கொழும்பில் இருக்கும் பிரபல பெண்கள் பாடசாலைகளுள் ஒன்றாகும். 1902 ஆம் ஆண்டு இங்கிலாந்து திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இத்திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் பழைமையான ஒன்றாகும். இங்கு சிங்கள மொழி மூலமும், தமிழ் மொழி மூலமும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.
1902 ஆம ஆண்டு அதி வணக்கத்துக்குரிய Dr. T. A. Melizan கொழும்பு பேராயராக இருந்தபோது அவரது வழிநடத்தலின் கீழ் நல்லாயன் கன்னியர்கள் புனித பிறிஜட் கன்னியர் மடம் பாடசாலையை ஆரம்பித்தனர்.