புல்ரேனு குகா (Phulrenu Guha, பெங்காலி : গুহ গুহ; பிறப்பு 13 ஆகஸ்ட் 1911) ஓர் இந்திய ஆர்வலர், கல்வியாளர் மற்றும் அரசியல்வாதி, இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஏப்ரல் 1964 முதல் ஏப்ரல் 1970 வரை மேற்கு வங்காளத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் 1967 முதல் 1969 வரை இந்திரா காந்தி அமைச்சகத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். இவர் 1984 இல் மேற்கு வங்கத்தின் கான்டை தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 1977 இல் பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[1] [2] [3] [4] [5] [6] [7] [8]
குகா 13 ஆகஸ்ட் 1911 அன்று கல்கத்தாவில் துணை குற்றவியல் நீதிபதியான சுரேந்திரநாத் தத்தா மற்றும் சமூக ஆர்வலர் அபலாபலா தத்தா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். ஒரு முற்போக்கான குடும்பத்தில் வளர்க்கப்பட்டார்.இவரது குடும்பத்தினர் பாரம்பரியமாக சமூக சேவை செய்து வந்தனர். இந்தியப் பிரிவினையின் போது அரசாங்கத்தின் முடிவினை எதிர்த்து இவரது தந்தை தனது பதவியினை துறந்ததாக எலோ மெலோ மோனே எலோ வில் குறிப்பிட்டுள்ளார்.[9] இவரது சமூக சீர்திருத்த நடவடிக்கைகளால் பல முறை சிக்களுக்கு ஆளாகினார். [10] இவளது தாய் அபலாபலாவும், குகா மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினார், தேசபக்தி மற்றும் எண்ணற்ற உணர்வுகளை இவருக்குள் ஊக்குவித்தார்.
குகா கோகலே நினைவு பெண்கள் பள்ளி மற்றும் கல்கத்தாவில் உள்ள பிரம்மோ பெண்கள் பள்ளியில் சில ஆண்டுகள் படித்தார்,அசாமில் உள்ள பள்ளியில் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். [11] அதைத் தொடர்ந்து, இவர் பாரிசலில் உள்ள பிரஜோமோகன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் , பின்னர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் வழிகாட்டுதலின் கீழ் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பெங்காலி இலக்கியம் மற்றும் தத்துவத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். [12]
பாரிசாலில் இருந்த ஆண்டுகளில் இவர்மீது யுகந்தர் கட்சி தாக்கத்தை ஏற்படுத்தியது, தேசியத்தில் உறுதியாக இருந்தார். இங்குதான் இவர் தனது வருங்கால கணவர் பீரேசு சந்திர குகாவை சந்தித்தார், இவர் இளைய யுகந்தர் கட்சியில் சேர்ந்தார், மேலும் 1925 இல் கரிம வேதியியலில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். புகழ்பெற்ற வேதியியலாளர்-தொழில்முனைவோர் பிரபுல்லா சந்திர ரே கீழ் வேலை செய்யத் தொடங்கினார். அதன்பிறகு, அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதற்கான இவரது ஆர்வத்திற்காக இவரது பெற்றோர் அரசியல் அறிவியலில் பட்டப் படிப்புக்காக லண்டன் இசுகூல் ஆஃப் ஓரியண்டல் இசுட்டடிசுக்கு அனுப்பினர். [10] [13]
லண்டனில் இருந்தபோது, குகா இந்தியாவில் உள்ள சமூக-அரசியல் தகவல் தொடர்பினை அறிந்திருக்க தவறவில்லை மற்றும் இந்தியாவிலிருந்து வரும் கடிதங்கள் மற்றும் செய்தித்தாள்களை வைத்திருந்த கோவர் ஸ்ட்ரீட்டை தவறாமல் பார்வையிடுவதன் மூலம் தகவலகளை தெரிந்து வைத்திருந்தார். [10] லண்டனில் இருந்து, இவர் இந்திய மற்றும் இலங்கை மாணவர்களின் கூட்டமைப்பின் பிராக் மாநாட்டில் கலந்து கொண்டார், கம்யூனிசத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் மற்றும் பிரித்தானியாவின் அப்போதைய பொதுவுடைமைத் தலைவர் பென் பிராட்லியை சந்தித்தார். [14] 1928 இல், பிரேசு இங்கிலாந்து சென்றபோது, குகா பாரிசில் சோர்போனில் சேர்ந்தார். பைரேஷ் லண்டன் மற்றும் கேம்பிரிட்ஜில் சர் ஜாக் டிரம்மண்ட் மற்றும் சர் பிரடெரிக் கௌலாண்ட் ஆப்கின்சுடன் வேலை செய்து உயிர்ச்சத்து கண்டுபிடிக்க உதவினார்.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)