போலந்து மீதான இரண்டாவது மங்கோலியப் படையெடுப்பு | |||||||
---|---|---|---|---|---|---|---|
மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பின் ஒரு பகுதி | |||||||
போலந்து மீதான இரண்டாவது மங்கோலியப் படையெடுப்பின் போது கொல்லப்பட்ட சாண்டோமியர்சின் 48 தொமினிக்கத் தியாகிகள் மற்றும் சதோக். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
மங்கோலியப் பேரரசின் தங்க நாடோடிக் கூட்டம் | போலந்து இராச்சியம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பெர்கே போரோல்டை தலபுகா நோகை | தூய ஐந்தாம் போலேசுலாவ் மற்றும் பலர் |
||||||
பலம் | |||||||
20,000[1] - 30,000[2] | 9,000:[3]
|
||||||
இழப்புகள் | |||||||
குறைவு | அதிகம் |
போலந்து மீதான இரண்டாவது மங்கோலியப் படையெடுப்பானது 1259-60ஆம் ஆண்டில் தளபதி போரோல்டையால் நடத்தப்பட்டது. இந்தப் படையெடுப்பின் போது சாண்டோமியர்சு, கிராக்கோவ், லூப்ளின், சவிச்சோசுத்து மற்றும் பைடோம் ஆகிய நகரங்கள் இரண்டாவது முறையாக மங்கோலியர்களால் சூறையாடப்பட்டன.[4][5]
படையெடுப்புக்குள்ளான மாகாணங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டன. ஏராளமான செல்வங்கள் சூறையாடப்பட்டன. படையெடுப்பாளர்கள் சுமார் 10,000 போலந்துக்காரர்களை அடிமைகளாகத் தங்களுடன் அழைத்துச் சென்றனர். இந்தப் படையெடுப்பின் மூலம் மங்கோலியர்களுக்கு எதிரான கூட்டணியை அழிப்பதில் தங்க நாடோடிக் கூட்டமானது வெற்றி கண்டது. கலிசிய-வோலினிய இராச்சியத்தை முழுவதுமாக அடிபணிய வைத்தது.