ம. கி. சந்திரசேகரன் | |
---|---|
பிறப்பு | சேலம் | 4 செப்டம்பர் 1937
இறப்பு | 2 சூலை 2009 | (அகவை 71)
தேசியம் | இந்தியர் |
துறை | விலங்கியல், காலவுயிரியல் |
விருதுகள் | சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது |
மரோலி கிருஷ்ணையா சந்திரசேகரன் (Maroli Krishnayya Chandrashekaran; செப்டெம்பர் 4, 1937 – சூலை 2, 2009) சேகர் என்றும் எம்.கே.சி என்றும் அறியப்பட்ட இந்திய விலங்கியலாளர் ஆவார். இவர் இந்தியாவில் காலவுயிரியல் எனும் அறிவியல் படிப்பிற்கான அடித்தளமிட்டவர் ஆவார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் மதிப்புமிகு உறுப்பினராகவும், மூன்றாம் உலக நாடுகளின் அறிவியல் அமைப்பின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். அறிவியல் தொழில்நுட்பத்துறையின் உயரிய விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை 1979 ஆம் ஆண்டு பெற்றார்.[1][2]
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் பிறந்த இவர், சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை அறிவியல் மற்றும் முதுநிலை அறிவியல் பட்டங்களை விலங்கியலில் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தினை விலங்கியலில் பெற்றார். உயிரிஅறிவியல் சஞ்சிகையின் தொகுப்பாசிரியராக 1991 முதல் 1997 வரையும், இரெசொனன்ஸ்: அறிவியல் கல்வி சஞ்சிகையின் தொகுப்பாசிரியராக 2003 முதல் 2005 வரை பணியாற்றினார்.[3][4][5]