மகா உபநிடதம் | |
---|---|
உரை நாராயணனைப் பற்றி விவாதிக்கிறது | |
தேவநாகரி | महा |
உபநிடத வகை | வைணவம்[1] |
தொடர்பான வேதம் | சாம வேதம்[2] |
அத்தியாயங்கள் | 6 |
பாடல்களின் எண்ணிக்கை | 549[3] |
அடிப்படைத் தத்துவம் | வைணவ சமயம் |
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
மகா உபநிடதம் ( சமக்கிருதம்: महा उपनिषद् , Maha Upanishad) என்பது ஒரு சமசுகிருதத்தில் இயற்றப்பட்ட இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும்.[4][5] இந்த உரை சாமான்ய உபநிடதம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
உரை இரண்டு பதிப்புகளில் உள்ளது. ஒன்று சில தொகுப்புகளில் அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[6] மற்றொன்று சாம வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[5] அதர்வண வேதப் பதிப்பு குறுகியதாகவும், உரைநடையிலும் உள்ளது.[7][8] சாம வேத பதிப்பு ஓரளவு கவிதை வசனங்களில் உள்ளது. [9]
வைணவ உபநிடதம் விஷ்ணுவை மிக உயர்ந்தவராகவும், பிரம்மாவிற்கும் மேலானவராகவும் விவரிக்கிறது.[1] [10] இருப்பினும், இரண்டு குழுக்களும் நூல்கள் அனைத்து இந்து கடவுள்களின் மரியாதைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன. மேலும் அவை ஒரே ஆன்மா - பிரம்மம் என்று வலியுறுத்துகின்றன.[10] உபநிடதம் வைணவ மற்றும் வேதாந்தக் கருத்துகளின் ஒத்திசைவை முன்வைக்கிறது. மேலும் "வசுதைவ குடும்பகம் " அல்லது "உலகம் ஒரே குடும்பம்" என்ற போதனைக்காக குறிப்பிடத்தக்கது.[11]
மகா உபநிடதத்தின் தேதி அல்லது ஆசிரியர் பற்றி தெரியவில்லை, ஆனால் அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்ட வைணவ உபநிடதங்களில் இது மிகவும் பழமையானது என்று ஜெர்மன் இந்தியவியலாளர் டியூசன் கருதுகிறார்.[12]
இந்த உரையின் கையெழுத்துப் பிரதிகளும் மகோபநிஷத் என்ற தலைப்பில் காணப்படுகின்றன.[9][13] அனுமனுக்கு இராமனால் விவரிக்கப்பட்ட முக்திகா நியதியின் 108 உபநிடதங்களின் தெலுங்கு மொழித் தொகுப்பில், இது 61 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[14] சுல்தான் முகமது தாரா சிக்கோவால் 1656 இல் ஓபனேகாத் என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட உபநிடதங்களின் தொகுப்பில் 50 உபநிடதங்களின் பாரசீக மொழிப்பெயர்ப்புடன், மதம் பற்றிய சிறந்த புத்தகமாக முன்மொழியப்பட்ட இது 16வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[15] வட இந்தியப் பதிப்பான. கோல்புரூக்கின் 52 உபநிடதப் பதிப்பில் இந்த உபநிடதம் 9 இல் பட்டியலிடப்பட்டுள்ளது. [16] நாராயணனின் பிப்லியோதிகா இண்டிகா பதிப்பில், தென்னிந்தியாவில் பிரபலமான 52 உபநிடதங்களின் பட்டியலில் உபநிடதம் 9 இல் பட்டியலிடப்பட்டுள்ளது.[17]
உபநிடதம் விஷ்ணுவை சாங்கியக் கொள்கைகளுக்கு மேல், சிவனுக்கும், பிரம்மனுக்கும் மேலான மனிதனாக முன்வைக்கிறது.[1] இந்த உபநிடத உரை சைவ உபநிடதங்களான அதர்வசிகா உபநிடதம், அதர்வசிரசு உபநிடதம் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. மேலும் விஷ்ணு மற்றும் பிரம்மாவை விட சிவனே உயர்ந்தவர் என்று வலியுறுத்துகிறது.[18] எவ்வாறாயினும், இரு குழுக்களும், பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் (அல்லது மகேசுவரன், உருத்திரன்) ஆகிய மூன்றையும் விவரிப்பதில் மிகுந்த மரியாதைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றது. மேலும் அவற்றை ஒரே உலகளாவிய ஆன்மா - பிரம்மம் ஆகியவற்றின் வெளிப்பாடுகளாக அடையாளப்படுத்துகின்றது.[10]