மகாநந்தி | |
---|---|
சிசுநாக வம்ச மன்னர் | |
ஆட்சிக்காலம் | கிமு அண். 367 – அண். 345 |
முன்னையவர் | நந்திவர்தனன் |
பின்னையவர் | மகாபத்ம நந்தன் |
குழந்தைகளின் பெயர்கள் | மகாபத்ம நந்தன் |
தந்தை | நந்திவர்தனன் |
மகாநந்தி (Mahanandin) வட இந்தியாவின் மகத நாட்டை ஆண்ட சிசுநாக வம்சத்தின் இறுதி அரசன் ஆவார். இவரது மகன் மகாபத்ம நந்தன் மகதத்தில் நந்த வம்சத்தை நிறுவியர் ஆவார்.
சிசுநாக வம்சத்தின் 9-வது மன்னராக நந்தி வர்தனனையும், அவரது மகன் மகாநந்தியை பத்தாவதும் மற்றும் இறுதி மன்னராக புராணங்கள் கூறுகிறது[1] சிசுநாக வம்சத்தின் மகாநந்திக்கும், கீழ் குலப்பெண்ணுக்கும் பிறந்த மகாபத்ம நந்தன் என்பவர், தனது தந்தையான மகாநந்தியைக் கொன்று, மகத நாட்டைக் கைப்பற்றி, நந்த வம்சத்தின் ஆட்சியை நிறுவினார்.[2]