மகாநாராயண உபநிடதம் | |
---|---|
மூர்த்தி of Narayana, with his consort, லட்சுமி (இந்துக் கடவுள்) | |
தேவநாகரி | महानारायणोपनिषत् |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு | Mahānārāyaṇa |
உபநிடத வகை | Vaishnava[1] |
தொடர்பான வேதம் | யசுர் வேதம்[2] அல்லது அதர்வண வேதம்[3] |
அத்தியாயங்கள் | பல பகுதிகள் |
பாடல்களின் எண்ணிக்கை | பல கைஎழுத்துப் பிரதிகள் |
அடிப்படைத் தத்துவம் | வைணவ சமயம் |
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
மகாநாராயண உபநிடதம் ( Mahanarayana Upanishad) ( சமக்கிருதம்: महानारायण उपनिषद् ) ஒரு பழங்கால சமஸ்கிருத நூலான இது இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். இந்நூல் வைணவ உபநிடதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [3][2]
உரை மூன்று முக்கிய பதிப்புகளில் கிடைக்கப் பெற்றுள்ளது. [4] 64 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பதிப்பு கிருஷ்ண யசுர் வேதத்துடன் பல தென்னிந்திய நூல்களில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்குப் பதிப்பில் உள்ள அதே வாசகம் விரிவாக்கப்பட்ட வடிவத்தில் 80 அத்தியாயங்களுடன் அதே வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2] இரண்டாவது பதிப்பு அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [3] 25 அத்தியாயங்களைக் கொண்டுள்ள இது திரிபத்விபூதியுடன் முன்னொட்டாக உள்ளது. [5] இந்த கையெழுத்துப் பிரதிகள் சில சமயங்களில் யாக்னிகி உபநிடதம் அல்லது திரிபத்-விபூதி-மகாநாராயண உபநிடதம் என்றும் பெயரிடப்படுகின்றன.[6][3] சுவாமி விமலானந்தாவின் கூற்றுப்படி, யக்ஞாத்மா என்ற முனிவர் நாராயணனைப் போற்றும் வகையில் இருப்பதால் இது யாக்னிகி உபநிடதம் என்றும் அழைக்கப்படுகிறது. [7]
உபநிடதத்தின் தலைப்பு "பெரிய நாராயணன்" என்று பொருள்படுவதாக இருந்தபோதிலும், [8] நாராயணன் மற்றும் உருத்திரன் இருவரையும் பெருமைப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.[4] உபநிடதம் வேதாந்தக் கலைச்சொற்களைப் பயன்படுத்துகிறது. [9] மேலும் இருக்கு வேதம், தைத்திரீய பிராமணம், வாஜஸனேயி சம்ஹிதை மற்றும் முதன்மை உபநிடதங்களிலிருந்து ஏராளமான கருத்துகளைப் பயன்படுத்துகிறது. [9]
சந்தியாவந்தனம் செய்யும் போது , பிராணாயாமம், மந்திராசமனம், காயத்ரி ஆவாகனம், தேவதாநமஸ்காரம் மற்றும் காயத்ரி பிரஸ்தானம் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் மந்திரங்கள் நேரடியாக மகாநாராயண உபநிடதத்திலிருந்து (80 அனுவாக்களைக் கொண்ட ஆந்திர மறுமலர்ச்சி) கிடைக்கபெற்றது. [10]
"எல்லையற்ற அண்ட நீரில்" ஒளியாகவும், பிரபஞ்சம் உருவாவதற்கு முன் இருந்த பிரம்மம் என்ற கொள்கையை விவரிக்கும் ஒரு வசனத்துடன், அண்டவியலுடன் உரை ஆரம்பிக்கிறது.[4][11] இந்த உரை இயற்றப்பட்ட நேரத்தில் பிரம்மனின் மனோதத்துவக் கொள்கை நன்கு நிறுவப்பட்டதாக அதன் தொடக்க வசனங்களின் பாணி தெரிவிக்கிறது.[4] அசையும் மற்றும் அசைவற்ற அனைத்து உயிரினங்களிலும் பிரம்மமும் ஓமில் என்ற பிரவண மந்திரமும் உள்ளது.[12] இது உயர்ந்ததில் உயர்ந்தது, பெரியவற்றில் பெரியது, [13] இது சட்டம், இது உண்மை, இது பிராமணம் எனவும் கூறுகிறது. [14] உரை இந்த மனோதத்துவக் கொள்கையை நெருப்பு, வாயு, சூரியன் , சந்திரன், பிரஜாபதி, புருசன், உருத்திரன் மற்றும் நாராயணன் என்று அழைக்கிறது. அவர்கள் அனைவரும் பிரம்மத்தைத் தவிர வேறு யாரும் இல்லை எனக் கூருகிறாது.[12] [15]{{Sfn|Srinivasan|1997|p=115} கடவுள்கள் தோன்றுவதற்கு முன்பே இருந்ததாக வசனம் 10.19 கூறுகிறது. [16]
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link)