மங்களூர் கோழிச் சுக்கா அல்லது 'கோரி சுக்கா/ கோரி அசாதினா (துளு) என்பது இந்திய உணவு வகையாகும். இந்த கோழி சுக்காமங்களூர் மற்றும் உடுப்பி பகுதியில் தோன்றியதாகும். சுக்கா என்பது "சுக்கா" வார்த்தையாகும். இந்தியில் "சுகா" என்றால் "உலர்ந்த" என்று பொருள்படும். சில நேரங்களில் "கோரி அஜடினா " என்றும் அழைக்கப்படுகிறது. இருப்பினும் இது உலர் மற்றும் பகுதி கிரேவி என இரண்டு மாறுபாடுகளில் தயாரிக்கப்படலாம்.[1]
மங்களூர் கோழிச் சுக்காவினை பின்வரும் முறையில் தயாரிக்கலாம்.[2]
கோழிக்கறியினை சிறிய துண்டுகளாக வெட்டி நன்றாகக் கழுவி, மஞ்சள், உப்பு, எலுமிச்சம் சாறு சேர்த்து ஊறவைக்கவேண்டும்.
மசாலா தூள் : உலர்ந்த வறுத்த சிவப்பு மிளகாய், கொத்தமல்லி, வெந்தயம், சீரகம், இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு முதலியவற்றை மிக்சியில் இட்டு தூளாகப் பொடி செய்யவேண்டும்.
மசாலா பசை: 1 வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பசையாக அரைத்து, துருவிய தேங்காய் துளைச் சேர்த்து சிறிது நேரம் அரைக்கவும்.
ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய்யை இட்டு சூடாக்கவேண்டும். எண்ணெய் சூடான பின்னர், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.