மலாயா தொடருந்து, (மலாய்: Keretapi Tanah Melayuஆங்கிலம்: Malayan Railways; ஜாவி: كريتاڤي تانه ملايو برحد); என்பது மலேசியத் தீபகற்பத்தில் தொடருந்து சேவைகளை வழங்கும் முதன்மைத் தொடருந்து நிறுவனம் ஆகும்.
கிரேத்தாப்பி தானா மெலாயு (Keretapi Tanah Melayu Berhad) என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, பரவலாக கே.டி.எம். (KTM) என அழைக்கப்படுகிறது.
பகாங்கோலா லிப்பிஸ் நகரத் தொடருந்து நிலையத்தில்.கே.டி.எம். நிறுவனத்தின் நகரிடை தொடருந்து
இந்தத் தொடருந்து அமைப்பு பிரித்தானிய குடியேற்றக் காலத்திலேயே வெள்ளீயப் போக்குவரத்திற்காகக் கட்டமைக்கப்பட்டது.
முன்னதாக இது மலாய் இராச்சியங்களின் கூட்டமைப்பு தொடருந்து(Federated Malay States Railways) எனவும் மலாயா தொடருந்து நிர்வாகம்(Malayan Railway Administration) எனவும் அழைக்கப்பட்டது.
1962-ஆம் ஆண்டு முதல் தற்போதைய பெயரான கிரேத்தாப்பி தானா மெலாயு என்று (சுருக்கமாக கே.டி.எம்.) அழைக்கப் படுகின்றது. 1992-ஆம் ஆண்டில் இந்த அமைப்பு முழுமையும் மலேசிய அரசாங்கத்தின் அரசுடைமைத் தனிநிறுவனமாக வரையறுக்கப்பட்டது.[1]