மலேசிய 20-அம்ச உடன்படிக்கை (ஆங்கிலம்: 20-Point Agreement அல்லது 20-Point Memorandum; மலாய்: Perjanjian 20 perkara; சீனம்: 二十点协议) என்பது 1963-ஆம் ஆண்டில், மலேசியக் கூட்டமைப்பு உருவாவதற்கு முன்னர் பிரித்தானிய போர்னியோ எனும் (சபாவின்) பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி (Crown Colony of North Borneo) முன்மொழிந்த 20 விதிமுறைக் கூறுகளின் பட்டியல் (List of 20 Points) ஆகும்.
மலேசிய ஒப்பந்தத்தின் (Malaysia Agreement) மலேசிய சட்டம் 1963-இல் (Malaysia Act 1963); பிரித்தானிய போர்னியோவின் பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி (Crown Colony of North Borneo) முன்மொழிந்த 20 விதிமுறைக் கூறுகளில்; சில கூறுகள் மட்டுமே இணைக்கப்பட்டன.
சில கூறுகள் வாய்மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதனால் அந்த வாய்மொழிக் கூறுகளுக்கு மலேசிய அரசியலமைப்பு (Constitution of Malaysia) சட்டப் பிரிவுகளில் சட்டத் தகுதிகள் கிடைக்கவில்லை. மலேசியக் கூட்டமைப்பிற்குள் சபா மாநிலத்தின் உரிமைகள் காலப் போக்கில் அரிக்கப்பட்டுவிட்டன என்று வாதம் செய்பவர்களின் மத்தியில்; இந்த 20-அம்ச உடன்படிக்கை ஒரு மையப் புள்ளியாக விளங்குகின்றது.[1][2]
1961-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி ஐக்கிய இராச்சியம், மற்றும் மலாயா கூட்டாட்சி அரசாங்கங்கள் வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையின்படி; எந்த ஓர் இறுதி முடிவையும் எடுப்பதற்கு முன், வடக்கு போர்னியோ மற்றும் பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி (சரவாக்) மக்களின் கருத்துக்களைக் கண்டறிய வேண்டியது அவசியம் என்று அறிவிக்கப்பட்டது. அந்தப் பணியை மேற்கொள்ள ஓர் ஆணையம் அமைத்து, பரிந்துரைகள் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
மலேசியக் கூட்டமைப்பை (Federation of Malaysia) உருவாக்கும் திட்டத்தை வடக்கு போர்னியோ (சபா) மற்றும் சரவாக் மாநிலங்களில் வாழும் மக்கள் ஆதரிக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்காக சனவரி 1962- இல் ஓர் ஆணையம் (Commission of Enquiry) நியமிக்கப்பட்டது. அந்த ஆணயத்தின் பெயர் காபோல்டு ஆணையம்.
அந்தக் கட்டத்தில் மலேசியா கூட்டமைப்பு என்பது மலாயா, புரூணை, சிங்கப்பூர், வடக்கு போர்னியோ மற்றும் சரவாக் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த ஆணையத்திற்கு இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநர் காபோல்டு பிரபு (Cameron Cobbold) தலைமை தாங்கினார்.
ஆணையத்தின் உறுப்பினர்கள்:
அரசுகளுக்கு இடையிலான (Inter-Governmental) கருத்துகளைக் கண்டறிவதற்கு தி லான்சுடவுன் குழு (Lansdowne Committee) நியமிக்கப்பட்டது. லான்சுடவுன் பிரபு (Lord Lansdowne) ஐக்கிய இராச்சியத்திற்காகவும்; துன் அப்துல் ரசாக் உசேன் (Tun Abdul Razak), மலாயா கூட்டமைப்பிற்காகவும் பொறுப்பு வகித்தார்கள். அப்போது துன் அப்துல் ரசாக் உசேன், மலாயாவின் துணைப் பிரதமராகப் பதவி வகித்தார்.[3]
மலேசியா கூட்டமைப்பு உருவான பின்னர், வடக்கு போர்னியோ மக்களின் நலன்கள், உரிமைகள் மற்றும் சுயாட்சியைப் பாதுகாக்கும் நோக்கத்தில் 20-அம்ச உடன்படிக்கை எழுதப்பட்டது. இதேபோன்ற ஒரு முன்மொழிவு பிரித்தானிய சரவாக் முடியாட்சியால் (Crown Colony of Sarawak) உருவாக்கப்பட்டது. அந்த முன்மொழிவு 18-அம்ச உடன்படிக்கை (18-Point Agreement) எனக் குறிப்பிடப்படுகிறது.
மலேசியா கூட்டமைப்பு உருவான பின்னர், சில கூறுகள் பின்பற்றப்படவில்லை என்றும் சிலர் கருதுகிறார்கள். அதன் தொடர்பாக இந்த 20-அம்ச உடன்படிக்கை முன்னிலை படுத்தப்படுகிறது.
இசுலாம் மலேசியாவின் தேசிய மதமாக இருப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை; என்றாலும், வடக்கு போர்னியோவில் அதிகாரப்பூர்வ மதம் எதுவும் இருக்கக்கூடாது. மேலும் மலாயாவின் தற்போதைய அரசியலமைப்பில் இசுலாம் தொடர்பான விதிகள் வடக்கு போர்னியோவில் பயன்படுத்தல் ஆகாது.[4][5]
(While there was no objection to Islam being the national religion of Malaysia, there should be no State religion in North Borneo, and the provisions relating to Islam in the present Constitution of Malaya should not apply to North Borneo.)
மலேசியாவின் அரசியலமைப்பு தற்போதைய மலாயா கூட்டமைப்பின் அரசியலமைப்பை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டாலும்; மலேசியாவின் அரசியலமைப்பு முற்றிலும் புதிய ஆவணமாக இருக்க வேண்டும்.
மற்றும் கட்டுப்பாடற்ற நிலையில் அனைத்து மாநிலங்களினாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக இருக்க வேண்டும். முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளில் வெவ்வேறு மாநிலங்களால் உருவாக்கப்பட்ட மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட அரசியலமைப்பின் தொடர்ச்சியான திருத்தங்களாக இருக்கக்கூடாது. வடக்கு போர்னியோவிற்கான புதிய அரசியலமைப்பிற்கு இது அவசியமானதாகும்.[4][5]
(Whilst accepting that the present Constitution of the Federation of Malaya should form the basis of the Constitution of Malaysia, the Constitution of Malaysia should be a completely new document drafted and agreed in the light of a free association of states and should not be a series of amendments to a Constitution drafted and agreed by different states in totally different circumstances. A new Constitution for North Borneo was of course essential.)
மலேசிய நாட்டின் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்படுவதற்கு வடக்கு போர்னியோவில் மாநிலத் தலைவருக்கு தகுதி இல்லை.[5]
(The Head of State in North Borneo should not be eligible for election as Head of the Federation.)
"மலேசியா" ஆனால் "மெலாயு ராயா" அல்ல.[5]
(Malaysia" but not "Melayu Raya")
வெளியில் இருந்து மலேசியாவின் எந்தப் பகுதியிலும் குடியேறுவதற்கான கட்டுப்பாடு மத்திய அரசிடம் இருக்க வேண்டும். ஆனால் வடக்கு போர்னியோவிற்குள் நுழைவதற்கு வடக்கு போர்னியோ அரசாங்கத்தின் அனுமதியும் தேவை. கடுமையான பாதுகாப்பு காரணங்களைத் தவிர; மற்ற அரசு நோக்கங்களுக்காக வடக்கு போர்னியோவிற்குள் நுழைவதை மத்திய அரசால் தடை செய்ய இயலாது. மலேசியாவின் பிற பகுதிகளில் இருந்து வடக்கு போர்னியோவிற்குள் குடிநுழைபவர்கள்; மத்திய அரசில் பணிபுரியும் நபர்களைத் தவிர; மற்ற நபர்களின் நடமாட்டத்தின் மீது வடக்கு போர்னியோவிற்குள் கட்டுப்பாடற்ற கட்டுப்பாட்டைக் கொண்டு இருக்க வேண்டும்.[4][5]
(Control over immigration into any part of Malaysia from outside should rest with the Central Government but entry into North Borneo should also require the approval of the State Government. The Federal Government should not be able to veto the entry of persons into North Borneo for State Government purposes except on strictly security grounds. North Borneo should have unfettered control over the movements of persons other than those in Federal Government employ from other parts of Malaysia into North Borneo.)
மலேசியாவில் இருந்து பிரிந்து செல்ல உரிமை கிடையாது.[5][6]
(There should be no right to secede from the Federation)
பொதுப்பணித் துறையில் போர்னியோ மயமாக்கத்தை விரைவாகச் செயல்படுத்த வேண்டும்.[5][6]
(Borneanisation of the public service should proceed as quickly as possible.)
வடக்கு போர்னியோவில் இருந்து தகுந்த தகுதி உடையவர்கள் அரசு பணியிடங்களில் அமர்த்தப்படும் வரையில், பிரித்தானிய அதிகாரிகள் பொதுச் சேவையில் தொடர்ந்து இருக்க ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.[5][6]
(Every effort should be made to encourage British Officers to remain in the public service until their places can be taken by suitably qualified people from North Borneo.)
காபோல்டு ஆணையத்தின் அறிக்கையின் பத்தி 148(k)-இல் உள்ள பரிந்துரை பின்வரும் திருத்தங்களுக்கு உட்பட்டு வடக்கு போர்னியோ கூட்டமைப்பில் குடியுரிமை உரிமைகளை நிலைநிறுத்த வேண்டும்:
(The recommendation in paragraph 148(k) of the Report of the Cobbold Commission should govern the citizenship rights in the Federation of North Borneo subject to the following amendments:)
வடக்கு போர்னியோ அதன் சொந்த நிதி, மேம்பாடு மற்றும் நிதியின் மீதான கட்டுப்பாடுகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்; மேலும் அதன் சொந்த வரிவிதிப்பு, மற்றும் அதன் சொந்த முயற்சியில் கடன்களைப் பெறுவதற்கான உரிமையைக் கொண்டிருக்க வேண்டும்.[5][6]
(North Borneo should retain control of its own finance, development and tariff, and should have the right to work up its own taxation and to raise loans on its own credit.)
கொள்கையளவில் வடக்கு போர்னியோவின் பழங்குடி இனங்கள் மலாயாவில் மலாய்க்காரர்கள் அனுபவிக்கும் சிறப்பு உரிமைகளை அனுபவிக்க வேண்டும். ஆனால், இந்த விசயத்தில் தற்போதைய மலாயாவின் கொள்கை, வடக்கு போர்னியோவில் அவசியமாய்ப் பொருந்தாது.[5][6]
(In principle the indigenous races of North Borneo should enjoy special rights analogous to those enjoyed by Malays in Malaya, but the present Malaya formula in this regard is not necessarily applicable in North Borneo.)
இது ஏழு ஆண்டுகளாக இருக்க வேண்டும்; அத்தகைய காலக் கட்டத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் வடக்கு போர்னியோ கூட்டமைப்புக்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட வேண்டும்; மேலும் வடக்கு போர்னியோ அரசாங்கத்திற்கு மத்திய அரசாங்கத்தால் மட்டும் தனியாக அதிகாரம் வழங்கப்படக் கூடாது.[5][6]
(This should be seven years and during such period legislative power must be left with the State of North Borneo by the Constitution and not be merely delegated to the State Government by the Federal Government.)
வடக்கு போர்னியோவில் தற்போதுள்ள கல்வி முறை பராமரிக்கப்பட வேண்டும், இதன் காரணமாக அது வடக்கு போர்னியோவின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.[5][6]
(The existing educational system of North Borneo should be maintained and for this reason it should be under state control.)
வடக்கு போர்னியோ கூட்டமைப்பு அரசாங்கத்தின் நேரடியான ஒப்புதல் இல்லாமல் வடக்கு போர்னியோவிற்கு வழங்கப்பட்ட எந்தவொரு சிறப்புப் பாதுகாப்பிலும் மத்திய அரசினால் திருத்தம் அல்லது மீட்டுக் கொள்ளுதல் செய்யப்படக் கூடாது.
வடக்கு போர்னியோ கூட்டமைப்பின் அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம் வடக்கு போர்னியோவில் உள்ள மக்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும்.[5][6]
(No amendment modification or withdrawal of any special safeguard granted to North Borneo should be made by the Central Government without the positive concurrence of the Government of the State of North Borneo.)
(The power of amending the Constitution of the State of North Borneo should belong exclusively to the people in the state.)
இது வடக்கு போர்னியோவின் மக்கள்தொகையை மட்டுமல்ல; அதன் அளவு மற்றும் சாத்தியக் கூறுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் எந்த வகையிலும் சிங்கப்பூரை விட குறைவாக இருக்கக் கூடாது.
(This should take account not only of the population of North Borneo but also of its size and potentialities and in any case should not be less than that of Singapore.)
யாங் டி-பெர்துவா நெகாரா.
(Yang di-Pertua Negara.)
சபா
(Sabah.)
தேசிய அளவிலான நில மன்றத்தின் அதிகாரங்கள் தொடர்பாக மலேசியாவின் அரசியலமைப்பில் உள்ள விதிகள் வடக்கு போர்னியோவில் பொருந்தாது. அதேபோல், தேசிய அளவில் உள்ள உள்ளாட்சிக்கான மன்ற அமைப்பு முறையை வடக்கு போர்னியோவில் அமல்படுத்தக்கூடாது.
(The provisions in the Constitution of the Federation in respect of the powers of the National Land Council should not apply in North Borneo. Likewise, the National Council for Local Government should not apply in North Borneo.)
மலேசியாவின் அரசியலமைப்பின் பிரிவு 2 (Article 2 of the Constitution of Malaysia); மாநில எல்லைகளை மாற்றுவதற்கு அல்லது கூட்டமைப்பில் புதிய மாநிலங்களைச் சேர்க்க மலேசிய நாடாளுமன்றத்திற்கு உரிமை உள்ளது என்று கூறுகிறது. இருப்பினும், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து மாநிலங்கள் பிரிவது குறித்து எந்த விதியும் இல்லை.[7]
மலேசியா ஒப்பந்தத்தில், "கவர்னர்" என்ற சொல்லின் பொருள் சபா மாநிலத் தலைவரின் பட்டப் பெயர் ("யாங் டி பெர்துவான் நெகாரா) என்று கூறுகிறது.[8]
எனினும் 27 ஆகத்து 1976-இல், மலேசியாவின் அரசியலமைப்பின் பிரிவு 160-இன் கீழ், ஆளுநர் ("Governor") என்ற சொல் நீக்கப்பட்டு யாங் டி பெர்துவா சபா என்று மாற்றப்பட்டது.[9]