மல்லண்ணா (Mallana) (பொது ஊழி15 ஆம் நூற்றாண்டு) ஒரு பிரபலமான தெலுங்குக் கவிஞரும் விஜயநகர பேரரசன் கிருஷ்ணதேவராயனின் அரசவையிலிருந்த அஷ்டதிக்கஜங்களில் ஒருவராகவும் இருந்தார்.
இவரது பிறந்த ஊர் ஆந்திராவின் இராயலசீமை என்று கருதப்படுகிறது. இவர் கிருஷ்ணதேவராயனின் இராணுவ பயணங்களில் உடன் சென்றார். இவர் தனது படைப்புகளை கொண்டவீட்டின் ஆளுநரும், விஜயநகரப் பேரரசில் சாலுவா திம்மண்ணா என்ற அமைச்சரின் மருமகனுமான நடேந்திர அப்பண்ணாவுக்கு (அப்பாஜி என்று பிரபலமாக அறியப்படுகிறார்) அர்ப்பணித்தார்.
அவந்தியின் மன்னரான இராஜசேகரரின் இராணுவ மற்றும் காதல் வெற்றிகளைப் பற்றிய "இராஜசேகர சரித்திரம்" என்பது இவரது பிரபலமான படைப்பு. சமகால கவிஞர்களைப் போலல்லாமல், இராஜசேகர வரலாற்றின் கதை முற்றிலும் மல்லண்ணாவின் மெத்தோஸின் பபாலியல் விளக்கங்களை மிகவும் நுட்பமான மற்றும் வரையறுக்கப்பட்ட முறையில் எழுதினார்.