வகை | தின நாளிதழ் |
---|---|
வடிவம் | தாள் |
உரிமையாளர்(கள்) | சிவந்தி ஆதித்தன் |
வெளியீட்டாளர் | தினத்தந்தி குழுமம் |
நிறுவியது | 1959 ஆம் ஆண்டு |
மொழி | தமிழ் |
தலைமையகம் | தமிழ் நாடு |
இணையத்தளம் | https://www.malaimurasu.in/ |
மாலை முரசு ( Malai Murasu) தினத்தந்தி குழுமத்தால் வெளியிடப்படும் ஒரு தமிழ் நாளிதழ். மாலை நேரங்களில் வெளியாகும் இந்த செய்தித்தாள், 1959 இல் சிவந்தி ஆதித்தனாரால் நெல்லையில் தொடங்கப்பட்டது.[1] சென்னைக்கு வெளியே தொடங்கப்பட்ட முதல் மாலைப் பத்திரிகை இதுவே ஆகும்.[2] மாலை முரசு உரிமையாளர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் ஆவார்.[3] மாலை முரசுயின் தற்போதைய நிருவாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் ஆவார் .[4]
இச்செய்தித் தாளின் இணைய தளத்தில் செய்திகள் மட்டும் அல்லாமல் திரைப்படத்துறைக்காக தனியாக ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதில் திரைப்படம் தொடர்பான செய்திகள், விமர்சனங்கள் மற்றும் வீடியோ பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
தினத்தந்தி மிகப் பெரிய நிறுவனம். அதை என்னிடம் ஒப்படைக்குமுன் ஒரு சிறு பத்திரிகையை நானே நடத்தி நேரடிப் பயிற்சி பெற நெல்லையில் தொடங்கப்பட்டது தான், மாலைமுரசு என்கிறார், பா. சிவந்தி ஆதித்தன்.
பின்னர், நானே ஒரு பத்திரிகையை தொடங்கி நடத்த முடியுமா என்பதை சோதிக்க, என்னை நெல்லைக்கு அனுப்பி னார்கள். அங்கு "நெல்லை மாலை முரசு" நாளிதழைத் தொடங்கி நடத்தும் முழுப் பொறுப்பையும் ஏற்றேன் சென் னைக்கு வெளியே தொடங்கப்பட்ட முதல் மாலைப் பத்திரிகையான " நெல்லை மாலை முரசு" திக்கெட் டும் வெற்றி உலா வந்தது.
{{cite book}}
: line feed character in |quote=
at position 185 (help)
{{cite book}}
: Check date values in: |year=
(help)