மீசை மழித்தல் (Keshanta (சமக்கிருதம்: केशान्त[1], பொதுவாக முடி மழித்தல் எனப்படும். இச்சடங்கை வட இந்தியாவின் ஆரிய மக்களால் மேற்கொள்ளப்படுகிறது. இது இந்து சமயத்தவர்கள் செய்ய வேண்டிய 16 சடங்குகளில் ஒன்றாகும். இச்சடங்கில் போது, குரு குலத்தில் கல்வி முடித்த 16வது வயது பதின்ம பருவ இளைஞன் முதன்முறையாக மீசையை மழிப்பதாகும். இது முடி காணிக்கை போன்ற சடங்காகும். இந்தச் சடங்கின் போது கல்வி கற்பித்த குருவுக்கு பசு மாட்டை தானம் செய்ய வேண்டும்.[2] மனு தரும சாத்திரப்படி (II.65) அந்தணர்கள் 16 வயதிலும்; சத்திரியர்கள் 22 வயதிலும்; வைசியர்கள் 24 வயதிலும் இச்சடங்கை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளது.[3]