மீனாட்சி ஜெயின் (Meenakshi Jain) ஓர் இந்திய அரசியல் விஞ்ஞானியும், வரலாற்றாசிரியரும் ஆவார். சாதிக்கும் அரசியலுக்கும் இடையிலான உறவுகள் பற்றிய அறிஞராக உள்ளார். [1] இவர், தற்போது தில்லி கார்கி கல்லூரியில் வரலாற்று இணை பேராசிரியராக உள்ளார். 2014ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தால் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். [2] 2020ஆம் ஆண்டில், இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் பணியாற்றியதற்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ இவருக்கு வழங்கப்பட்டது.
ஜெயின், குடியேற்ற இந்தியாவில் சதி நடைமுறையைப் பற்றிய ஒரு அற்புதமான தொகுதியை (சதி: சுவிசேஷகர்கள், பாப்டிஸ்ட் மறைபணியாளர்கள் மற்றும் மாறிவரும் காலனித்துவ சொற்பொழிவு) எழுதினார் . மேலும், வரலாற்று பாடப்புத்தகத்தையும் (இடைக்கால இந்தியா) எழுதியுள்ளார். இது குறிப்பிடத்தக்க அறிவார்ந்த விமர்சனத்திற்கு உள்ளானது. ரூமிலா தாப்பரின் முந்தைய உரையையும் மாற்றியது.
மீனாட்சி ஜெயின், தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முன்னாள் ஆசிரியர், பத்திரிகையாளர் கிரிலால் ஜெயினின் மகளாவார். [3] இவர், தில்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்தார். [4] சாதிக்கும் அரசியலுக்கும் இடையிலான சமூக அடித்தளங்கள் மற்றும் உறவுகள் பற்றிய இவரது ஆய்வறிக்கை 1991இல் வெளியிடப்பட்டது. [4]
இவர் தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த கார்கி கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக உள்ளார். [5] திசம்பர் 2014 இல், இந்திய அரசாங்கத்தால் இந்திய வரலாற்று ஆராய்ச்சி மன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2]
{{cite book}}
: Missing or empty |title=
(help)