மூன்றாம் வாசுதேவன் (Vasudeva III) இவர் ஒருவேளை குசானப் பேரரசின் இரண்டாம் வாசுதேவனின் மகனாக இருக்கலாம். இவர் பொ.ச.360-365 வரை செய்துள்ளார்.
மூன்றாம் வாசுதேவனின் ஆட்சியில் குசானப் பேரரசு முக்கியத்துவமற்ற நிலைக்குச் சென்றது. மேற்கில் சாசானியப் பேரரசு அச்சுறுத்தலாக இருந்தது, கிழக்கில் உள்ளூர் பூர்வீக மக்கள் தங்கள் சுதந்திரத்தை மீண்டும் பெற்றனர். [1]
இவரது இருப்பு சர்ச்சைக்குரியது, [2] இவரது தந்தையாகக் கூறப்படும் இரண்டாம் வாசுதேவனின் இருப்புக்கான ஆதரம் கிடைத்துள்ளது. [3] ஆனால் எந்த கல்வெட்டு ஆதாரமும் இவரது இருப்பை ஆதரிக்கவில்லை. [4]
மூன்றாம் வாசுதேவனின் அதே பெயர் மற்றும் ஆட்சி எண் கொண்ட மற்றொரு குசான ஆட்சியாளர் இருந்திருக்கலாம் என்று நாணயவியல் சான்றுகளிலிருந்து முன்மொழியப்பட்டது. [5]