மூலசார (Mūlacāra) (அடிப்படை நடத்தை) என்பது திகம்பரப் பிரிவைச் சேர்ந்த ஆசார்ய வட்டகேர[1] என்பவரால் கி.பி. 150 அளவில் எழுதப்பட்ட சமண நூலாகும்.[2][3] மூலசார, அநகார-தர்ம எனப்படும் திகம்பரத் துறவியின் நடத்தை நெறிமுறைகள் தொடர்பில் விளக்குகிறது.[4] இந்நூல் பன்னிரண்டு அத்தியாயங்களையும் 1,243 வரிகளையும் கொண்டு பிச்சையேற்கும் நடைமுறை தொடர்பில் விளக்குகிறது. இது திகம்பர ஆச்சாராங்க எனவும் அழைக்கப்படுகிறது.[5]
இந்நூல், அர்த்தமாகதி மொழியின் சாயலுடைய, எனினும் தனித்துவமுடைய ஒரு மொழியில் எழுதப்பட்டுள்ளது.[1] இவ் வட்டார வழக்கு திகம்பர சௌரசேனி (அல்லது சமண சௌரசேனி) என அழைக்கப்படுவதோடு, இம்மொழி பண்டைய மதுராப் பகுதியின் மொழியைப் பிரதிபலிப்பதாக இந்திய அறிஞர்கள் கருதுகின்றனர்.[1]கர்நாடகாவில் காணப்படும் மூலசார நூலின் பெரும்பாலான பண்புகள் சுவேதாம்பர நூல்களில் காணப்படும் துறவு நடத்தைமுறைகளை ஒத்துள்ளன.[1]மூலசாரத்தில் காணப்படும் சில வரிகள், சுவேதாம்பரப் பிரிவின் தசவைகாலிகவில் காணப்படும் வரிகளோடு பெருமளவில் ஒத்திருக்கின்றன. இதன் மூலம், திகம்பர மற்றும் சுவேதாம்பரப் பிரிவுகளிடையே நூல்மரபுகள் துவக்கத்தில் ஒன்றாக இருந்து பின்னர் பிளவுபட்டுப் பிரிந்ததாகவே கருத முடிகிறது.[1][6]
வசுநந்தி, மூலசார நூலுக்கு சமசுகிருதத்தில் உரையெழுதியுள்ளார். இதற்கு ஆசாரவிருத்தி எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.[6]
↑Bhakti in the Early Jain Tradition: Understanding Devotional Religion in South Asia, John E. Cort , History of Religions, Vol. 42, No. 1 (Aug., 2002), pp. 59-86
↑Mulachara Ka Samikshatmaka Adhyayana; Premi, Phulchand Jain, 1987
தத்துவார்த்த சூத்திரம், திகம்பரர்கள் மற்றும் சுவேதாம்பரர்களால் தமது நூல்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் சுவேதாம்பரர்கள் இதனை ஒழுங்குமுறைப்பட்ட நூலாக வகைப்படுத்துவதில்லை.