யாதனபுடி சுலோச்சனா இராணி

யாதனபுடி சுலோச்சனா இராணி (Yaddanapudi Sulochana Rani)(2 ஏப்ரல் 1940 - 18 மே 2018) என்பவர் ஓர் தெலுங்கு மொழி நாவலாசிரியர் ஆவார்.[1] 1970கள் மற்றும் 1980களின் முற்பகுதியில், குறிப்பாக பெண்கள் மத்தியில், இவருக்கு வலுவான ரசிகர் பட்டாளம் இருந்தது.[2] இவரது பல கதைகள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டன. இவர் இரண்டு முறை நந்தி விருதுகளை வென்றார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

யாதனபுடி சுலோச்சனா இராணி 1940ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி[3] ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள காசாவில் ஒரு தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தார்.[4] இவருக்கு சிறு வயதிலிருந்தே இலக்கியத்தின் மீது வலுவான நாட்டம் இருந்தது. இவர் 80க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார்.[4]

இறப்பு

[தொகு]

யாதனபுடி தனது மகளைப் பார்க்கச் சென்றபோது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மே 18, 2018 அன்று இறந்தார். அப்போதைய தெலங்காணா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மற்றும் ஆந்திரப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.[5][4]

திரைப்படங்களாக உருவாக்கப்பட்ட நாவல்கள்

[தொகு]
வ. எண் நாவல் திரைப்படம்
1 மீனா மீனா (1973)
'அ ஆ (2016)[6]
2 ஜீவனா தாரங்கலு ஜீவனா தாரங்கலு
3 (தெரியவில்லை) அம்மா நானா
4 செகரட்டரி செகரட்டரி
5 இராதா கிருஷ்ணா இராதா கிருஷ்ணா
6 அக்னி பூலு அக்னி பூலு
7 பிரேம லேகலு பிரேம லேகலு
8 பங்காரு கலலு பங்காரு கலலு
9 விஜேதா விசித்ரா பந்தம்
10 ஜெய் ஜவான் ஜெய் ஜவான்
11 ஆத்ம கவுரவம் ஆத்ம கவுரவம்
12 பிரேமா தீபிகா காஞ்சனா கங்கா
13 கிரிஜா கல்யாணம் கிரிஜா கல்யாணம்
14 ஆத்மியுலு ஆத்மியுலு
15 மதுர சுவப்னம் மதுர சுவப்னம்
16 மொகாலி ரெகுலு மொகாலி ரெகுலு
17 சண்டிப்ரியா சண்டிப்ரியா

பிற நாவல்கள்

[தொகு]
  • கீர்த்தி கீரிதாலு
  • ஆகமனா
  • ஆராதனா
  • ஆத்மியுலு
  • அபிஜாதா
  • அபிசாபம்
  • ஆஹுதி
  • அமர ஹிருதயம்
  • அமிர்த தாரா
  • ஆனந்த சமேதா
  • அனுராகா கங்கா
  • அனுராக தோரணம்
  • அர்த்த ஸ்திதா
  • ஆஷால சிகராலு
  • அவ்யக்தம்
  • பஹுமதி
  • பந்தீ
  • சீக்கட்டிலோ சிறு தீபம்
  • தாம்பத்ய வனம்
  • ஈ தேசம் மாகேமிச்சிந்தி
  • ஈ ஜீவிதம் நாடி
  • ஈ தாரம் கதா
  • கிரிஜா கல்யாணம்
  • கிருதய கானம்
  • ஜாஹ்னவி
  • ஜலபதம்
  • ஜீவனா கீதம்
  • ஜீவனா தரங்கலு-1
  • ஜீவனா தரங்கலு-2
  • ஜீவனா சத்யலு
  • ஜீவன சௌரபம்
  • ஜோதி 
  • கலால கூகிலி
  • கிருஷ்ண லோஹிதா
  • மதுர ஸ்வப்னம்
  • மீனா (அ ஆ)
  • மீனா 2 (அ ஆ)
  • மோகிதா
  • மனோபிராமா
  • மதுரமினா ஓடாமி
  • மௌன பாஷ்யம்
  • மௌன போராட்டம்
  • நாம சந்திரிகலு
  • நீரஜனம்
  • நேனு ராசயித்ரினி கானு
  • நிசாந்தா
  • ஒன்டாரி நட்சத்திரம் 1
  • ஒன்டாரி நட்சத்திரம் 2
  • பார்த்து
  • பிரேமா தீபிகா
  • பிரேம பீடம்
  • பிரேம சிமமாசனம்
  • பிரியா சகி
  • சகஜீவனம்
  • சம்சார ரதம்
  • சம்யுக்தா
  • சீதாபதி
  • சிநேகமாயி
  • சௌகந்தி
  • சுவேதா குலாபி
  • சுரவண சமீரலு
  • வெண்ணெல்லோ மல்லிகா
  • விஜேதா
  • வெமலு

விருதுகள்

[தொகு]
நந்தி விருது[7]
  • சிறந்த கதை எழுத்தாளர் - ஆத்ம கவுரவம் (1965)
  • இரண்டாவது சிறந்த கதை எழுத்தாளர் - காஞ்சனா கங்கா (1984)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mrinalini (21 May 2018). "యద్దనపూడి సులోచనా రాణి: 'హీరో'ల సృష్టికర్త" (in te). BBC News తెలుగు. https://www.bbc.com/telugu/india-44198123. 
  2. Nadadhur (2018-05-22). "Yaddanapudi Sulochana Rani : A star in her own right". The Hindu. https://www.thehindu.com/news/national/telangana/yaddanapudi-sulochana-rani-a-star-in-her-own-right/article23957626.ece. 
  3. Kaura, Ajīta; Caur, Arpana (1976). Directory of Indian Women Today, 1976 (in ஆங்கிலம்). India International Publications.
  4. 4.0 4.1 4.2 "రచయిత్రి యద్దనపూడి సులోచనారాణి కన్నుమూత (Writer Yaddanapudi passed away)". Sakshi Education. Sakshi. Retrieved 23 May 2020.
  5. "Popular Telugu novelist Yaddanapudi Sulochana Rani passes away at 78". The News Minute. 2018-05-21.
  6. "A.. Aa.. Movie review: Trivikram is back with a bang". 2 June 2016.
  7. "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Andhra Pradesh (magazine). Retrieved 21 August 2020.(in Telugu)