26°58′01″N 94°37′09″E / 26.967055°N 94.619086°E
ரங்கர் ৰংঘৰ Rang Ghar | |
---|---|
![]() ரங்கர் தோட்டம் | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | அகோம் கட்டிடக்கலை |
இடம் | சிவசாகர் அசாம் இந்தியா |
கட்டுவித்தவர் | சுவர்கதேவ் |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அமைப்பு முறை | செங்கற்கள், பைஞ்சுதை |
ரங் கர், இந்திய மாநிலமான அசாமின் சிவசாகர் நகரத்தில் உள்ள அரசக் கட்டிடமாகும். ரங் கர் என்ற சொல்லுக்கு மனமகிழ் மன்றம் என்று பொருள். இது ரங்பூர் அரண்மனையுடன் அமைந்த தலாதல் கர் என்ற கட்டிடத்துக்கு வட கிழக்கில் உள்ளது.,[1]
சுவர்கதேவ் பிரமத்தா சிங்கா என்ற அரசரின் ஆட்சியில், 1744-1750ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது.[2][3]
குவகாத்தியில் 33வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த போட்டிகளுக்கான சின்னத்தில் இந்த கட்டிடத்தின் உருவப்படம் இடம்பெற்றிருந்தது.[4]
அண்மைக்கால நிலநடுக்கத்தினால், இந்த கட்டிடத்தில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.[5]