![]() ரந்தாவ் பாஞ்சாங் நகரம் | |
![]() | |
ஆள்கூறுகள்: 6°01′14″N 101°58′09″E / 6.02056°N 101.96917°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 17200 |
தொலைபேசி எண் | +609 |
போக்குவரத்துப் பதிவெண் | K |
ரந்தாவ் பாஞ்சாங், (மலாய்: Rantau Panjang; ஆங்கிலம்: Rantau Panjang; தாய்: รันเตาปันจัง; ஜாவி: رنتاو ڤنجڠ) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில், பாசிர் மாஸ் மாவட்டத்தில் (Pasir Mas District) அமைந்துள்ள நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 39 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ரந்தாவ் பஞ்சாங் நகரின் வடக்குப் பகுதியில் கோலோக் ஆறு ஓடுகிறது. இந்தக் கோலோக் ஆறுதான் தாய்லாந்து; மலேசியா நாடுகளின் எல்லையாகவும் அமைகின்றது.[1]
இந்த நகரம் பல்வேறு வகையான விற்பனை பொருட்கள் மற்றும் நினைவு பரிசுப் பொருள்களுக்குப் பிரபலமானது. மலேசியாவின் தாய்லாந்து எல்லைத் தொடர்பான அரசாங்க அலுவலகங்கள் பெரும்பாலும் இங்குதான் உள்ளன.
எல்லைச் சோதனைகள் பிரிவு; பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு; அரச சுங்கப் பிரிவு; அரசு கலால் துறை; குடிவரவுத் துறை; அரச மலேசியக் காவல்துறை போன்றவை உள்ளன. [2]
ரந்தாவ் பாஞ்சாங்கைச் சுற்றிலும் போதைப்பொருள் கடத்தல்; அரிசி கடத்தல்; சர்க்கரை கடத்தல்; மனிதர்கள் கடத்தல் போன்ற கடத்தல் நிகழ்ச்சிகள் நடைபெறுவதைத் தடுக்க அரசாங்கம் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. ரந்தாவ் பாஞ்சாங் சுங்க வரி இல்லாத ஒரு பகுதி. அதனால் பொதுமக்கள் அதிகமாக இங்கு வருகின்றனர்.[2]
ரந்தாவ் பாஞ்சாங் நிர்வாக மன்றத்தில் 7 முக்கிம்கள் உள்ளன.