ராதா கிருஷ்ணா | |
---|---|
![]() ராதா கிருஷ்ணா தொடரின் சுவரொட்டி | |
வகை | தொன்மவியல் காதல் நாடகம் |
உருவாக்கம் | சித்தார்த் குமார் திவாரி |
மூலம் | கிருட்டிணன் |
இயக்கம் | சித்தார்த் குமார் திவாரி |
நடிப்பு |
|
முகப்பிசை | "கண்ணனின் புல்லாங்குழல் இசை என் நெஞ்சில் பாயாதா" |
முற்றிசை | 'ராதா ராதா' |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்மொழி (மொழிமாற்றம் செய்யப்பட்டது ) |
பருவங்கள் | 1 |
அத்தியாயங்கள் | 1145 |
தயாரிப்பு | |
ஓட்டம் | தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | விஜய் தொலைக்காட்சி |
ஒளிபரப்பான காலம் | 3 திசம்பர் 2018 27 சனவரி 2023 | –
Chronology | |
முன்னர் | அவளும் நானும் |
ராதா கிருஷ்ணா என்பது விஜய் தொலைக்காட்சியில் திசம்பர் 3, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி, ஜனவரி 7, 2019 முதல் மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பானது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது பருவம் ஒளிபரப்பு செய்யப்படுவதற்காக தொடர்களின் நேரங்கள் மாற்றப்பட்டன.எனவே ஒளிபரப்ப நேரம் கிடைக்காத காரணத்தால் 170 அத்தியாயங்களுடன் ராதா கிருஷ்ணா தொடர் நிறுத்தப்பட்டது. பின் மீண்டும் ஜூலை 2, 2019 முதல் 171வது அத்தியாயத்திலிருந்து அதிகாலை 2:00 மணிக்கு வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பப்பட்டது.ஜூலை 17,2019 அன்று 186 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டது. இது இந்து கடவுள் கிருட்டிணன் மற்றும் ராதாவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு தொன்மவியல் காதல் காவியம் ஆகும்.[1][2] நேயர்களின் விருப்பத்திற்கேற்ப விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் 12 ஜுன் 2021 முதல் மீண்டும் முதல் எபிசோடிலிருந்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 9 மணி முதல் 10:30 மணி வரை ஒளிப்பரப்பு செய்யப்பட்டுவருகிறது.
இது ஸ்டார் பாரத் என்ற தொலைக்காட்சியில் அக்டோபர் 3, 2018 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தி தொடரான 'ராதா கிருஷ்ண்' என்ற தொடரின் தமிழ் மொழிமாற்றுத் தொடர் ஆகும்.
கிருஷ்ணரும், ராதாவும் காதலின் அடையாளமாக போற்றப்படுகின்றனர். கிருஷ்ணனை மறக்கும் படி ஸ்ரீ தாமன் இட்ட சாபத்தின் காரணமாக கோலோகம் விட்டு பூலோகம் வருகிறாள் ராதா. அவளை தேடி கிருஷ்ணனும் பூவுலகம் வருகிறார். அங்கும் அவர்களின் காதல் தொடர்கிறது.இருப்பினும் வாழ்வில் எதிர் கொண்ட பிரச்சினைகளை தாண்டி வந்த பிறகும் கூட அவர்கள் இருவரும் பிரிந்து சென்றது ஏன்? கிருஷ்ணா வை விடுத்து அயனை ராதை மணம் புரிய காரணம் என்ன? என்பது தான் கதை.
தொடரின் வசனங்கள் முழுக்க முழுக்க தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை என்றும், தமிழ் மொழிபெயர்ப்பில் நிறைய சமஸ்கிருத வார்த்தைகள் நிறைந்துள்ளன என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.[மேற்கோள் தேவை]