இராம்கர் தால் ஏரி Ramgarh Tal Lake | |
---|---|
அமைவிடம் | கோரக்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 26°44′N 83°25′E / 26.733°N 83.417°E |
வகை | ஏரி |
பூர்வீக பெயர் | रामगढ़ ताल (போச்புரி) |
இராம்கர் தால் ஏரி (Ramgarh Tal) இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் அமைந்துள்ளது 1971 இல் கண்டறியப்பட்டது. அப்போது அதன் பரப்பளவு 723 எக்ட்டேர்(1790 ஏக்கர்) ஆகும். அதன் சுற்றளவு 18 கிமீ ஆகும். இப்போது அதன் பரப்பளவு 678 எக்டேர்(1689 ஏக்கர்) ஆகும்.[1]
இந்த ஏரி நிலக்கிழார் இராய் கமலாபதி இராய் பொறுப்பில் இருந்துள்ளது. நிலக்கீழார் முறை ஒழிக்கப்பட்டது இந்திய அரசி இந்த ஏரியை கைபாற்றியுல்ளது. என்றாலும் இன்றும் இதன் சில பகுதிகள் அந்நிலக்கிழார் குடும்பத்திடமே உள்ளது.
இராம்கர் எனும் ஊர் ஒரு பேரழிவால் சிதைந்தபோது உருவாகிய பெருந்துளையில் நீர் நிரம்பி ஏரியானதாக மக்களால் நம்பப்படுகிறது.[2]
வீர் பகதூர் சிங் 1985 இல் முதலமைச்சரானபோது இராம்கர் தாலை ஒரு சுற்றுலா மையமாக்கும் திட்டத்தை உருவாக்கினார்ரானால், அவர் இறந்தபோது 1989 இல் இது கைவிடப்பட்டது.
யோகி ஆதித்யனாத் 2017 இல் முதலமைச்சரானதும் பன்னாட்டுத் தர சுற்றுலா மையமாக்க திட்டமிட்டார்.[3][4]உ.பி. அரசும் ஏரியை சதுப்புநில மேலாண்மை விதிகளுக்குக் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறது.[5]
இந்த ஏரியை இப்போது தேசியப் பசுமை ஆணையம் பதுகாப்புக்கும் பேணுதலுக்கும் பொறுப்பேர்றுள்ளதுளிவ்வமைப்பு ஏரியைச் சுற்றி 500 மீ ஆரத்துக்குள் கட்டுமான வேலைகல் நிறுத்தப்பட்டுள்ளன.
இராம்கர் தால் ஏரியின் நீரின் தரம் அங்கிருக்கும் குடியிருக்களில் வாழ்பவர் குப்பை கொட்டும் இடமாகப் பயன்படுத்துவதால் குறைந்துவருகிறது.[6]
"பூர்வாஞ்சல் கடலாக்கம்": இப்போது ஏரியில் தோணிவிட இப்பெயர் சூட்டப்பட்டு கடல் வாரியத்தின் வழி நீர்ப்போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு மக்களிடம் கவர்ச்சியூட்டப்பட்டு வருகிறது.
புதிய பெயர் சுற்றுலா வருபவர்களைக் கவர்ந்துள்ளது.[7]