ரீட்டா பானர்ஜி (Rita Banerji) ஓர் எழுத்தாளர், புகைப்படக்காரர் மற்றும் பாலின ஆர்வலர் ஆவார். இவரது புனைகதை அல்லாத புத்தகம் செக்ஸ் அண்ட் பவர்: டிஃபைனிங் ஹிஸ்டரி, ஷேப்பிங் சொசைட்டிஸ் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்தியாவில் பெண் பாலினத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 50 மில்லியன் மிசிங் எனும் எழிவரி பிரச்சாரத்தின் நிறுவனர் ஆவார்.
பானர்ஜி பாதுகாப்பு உயிரியலில் நிபுணத்துவம் பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலராகத் தனது செயற்பாட்டு வாழ்க்கையினைத் தொடங்கினார். 1995 ஆம் ஆண்டில் சோளத்தில் அமில மழையின் விளைவுகள் குறித்த தனது முனைவர் பணிக்காக அறிவியல் பெண்கள் சங்கத்தில் (AWIS) தாவர உயிரியலில் ஆமி லூட்ஸ் விருது பெற்றார். [1] இவர் பெற்ற மற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்: முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான உயிரியலில் மோர்கன் ஆடம்ஸ் விருது; சிக்மா ஜி அறிவியல் ஆராய்ச்சி சங்கம், இணை உறுப்பினர்; அமெரிக்காவின் தாவரவியல் குழுவின் இளம் தாவரவியலாளர் விருது; சூழலியல் ஆராய்ச்சிக்கான சார்லஸ் ஏ. டானா ஆய்வுதவித் தொகை; மரபியல் ஆராய்ச்சிக்காக ஹோவர்ட் ஹியூஸ் மானியம். அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஹூச இஸ் ஹூ அமாங் மாணவர்களில் பட்டியல் என்பதில் இவர் பட்டியலிடப்பட்டார். பானர்ஜியின் பல திட்டங்கள் பாலின கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தன. இவர் இந்தியாவில் சிப்கோ பெண்கள் அடிமட்ட இயக்கத்தில் சூழல்-பெண்ணியவாதி வந்தனா சிவன் மற்றும் இன்ஸ்டிடியூட் ஃபார் பாலிசி ஸ்டடீஸ் மற்றும் உலக வளங்கள் நிறுவனஙகள் ஆகியவற்றோடு இணைந்து பணியாற்றியுள்ளார்.
30 வயதில் பானர்ஜி இந்தியா திரும்பிய பின்னர் இந்தியாவில் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகள் பற்றி எழுதத் தொடங்கினார். [2] இவரது எழுத்துக்கள் மற்றும் புகைப்படங்கள் பல்வேறு நாடுகளில் உள்ள பத்திரிகைகள் மற்றும் இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டில் இவர் பத்திரிகை எழுதுதலுக்கான சிறந்த விருதைப் பெற்றார்.
பானர்ஜியின் புனைகதை அல்லாத புத்தகம் செக்ஸ் அண்ட் பவர்: டிஃபைனிங் ஹிஸ்டரி, ஷேப்பிங் சொசைட்டிஸ் இந்தியாவில் முதன்முதலில் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் இந்தியாவில் பாலியல் மற்றும் பாலீர்ப்பு பற்றிய ஐந்து வருட சமூக மற்றும் வரலாற்று ஆய்வின் விளைவாகும். புத்தகத்தில் பானர்ஜி, இலிங்கம் மற்றும் யோனி வழிபாடு, கோவில்களில் சிற்றின்ப கலை மற்றும் காம சூத்திரம் போன்ற காதல் மற்றும் கலை பற்றிய இலக்கியம் ஆகியவற்றைக் காட்டும் ஒரு வரலாற்று வெளிப்படையாக இருந்த போதிலும், இன்றைய இந்தியா ஏன் பாலியல் பற்றி வெறுப்பாக இருக்கிறது என்பதை முதன்மையாக ஆராய்கிறது. . [3] ஒரு சமூகத்தின் பாலியல் மாற்றங்கள் காலப்போக்கில் மாறுபடும் மற்றும் அதிகாரத்தில் உள்ள சமூகக் குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று இந்த நூலினை இவர் நிறைவு செய்கிறார். [4]
டிசம்பர் 2006 இல், பானர்ஜி 50 மில்லியன் மிசிங் எனும் எழிவரி பிரச்சாரத்தினைத் துவங்கினார்.இந்தியாவில் பெண் பாலினப் படுகொலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதனை நோக்கமாக கொண்டது இந்தப் பிரச்சாரம். 2400 க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்கள் மற்றும் பெண்களின் புகைப்படங்களைச் சேகரித்து ஃப்ளிக்கரில் இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டது. [5] இது தொடங்கப்பட்டதில் இருந்து பிரச்சாரம் வளர்ந்து மற்ற சமூக வலைத்தளங்களுக்கும் பரவி, தகவல் வலைப்பதிவுகள் மூலமும் பிரச்சாரம் தீவிரமடைந்தது.