ரேவதி சங்கரன் (Revathi Sankaran) என்பவர் தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமானவர் ஆவார். மற்றும் இவர் ஒரு திரைப்பட நடிகையுமாவார். உரையாற்றுதல், பாடுதல், பாவனைகளை வெளிப்படுத்தி நடித்தல், சில சமயங்களில் நடன முத்திரைகளை அபிநயித்தல் போன்ற கலைவடிவங்களில் வல்லுனாராகத் திகழ்ந்த இவர் அரிகதா கலாட்சேபம் என்ற பெயரில் திருமாலின் அவதாரக் கதைகளை கூறும் கலைப்பணியில் ஈட்டுபட்டார்[1][2][3][4][5]
ரேவதிக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது 2010 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. [6]
ரேவதி நடித்த தொலைக்காட்சி தொடர்கள் பின்வருமாறு: