லீலா ஓம்செரி | |
---|---|
![]() | |
பிறப்பு | திருவட்டாறு, திருவிதாங்கூர் அரசாட்சி, பிரித்தானிய இந்தியா (தற்போது கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) | 31 மே 1929
இறப்பு | 1 நவம்பர் 2023 புது தில்லி, தில்லி தே.த.ப, இந்தியா | (அகவை 94)
பணி | பாடகர் ,எழுத்தாளார் |
பின்பற்றுவோர் | http://leelaomchery.org |
வாழ்க்கைத் துணை | ஓம்செரி என். என். பிள்ளை |
விருதுகள் | பத்மசிறீ சங்கீத நாடக அகாதமி விருது மருநாதன் மலையாளி விருது சங்கீத குலபதி சங்கீத கோவிட கலாச்சார்யா சங்கீத சர்வ பூமா |
லீலா ஓம்செரி (Leela Omsheri) ஓர் பாரம்பரிய பாடகரும், இசைக்கலைஞரும் மற்றும் எழுத்தாரும் ஆவார். பாரம்பரிய இசையில் தனது பங்களிப்புகளுக்கு அறியப்பட்டவர். மேலும், இந்திய பாரம்பரிய இசையில் தனது பங்களிப்புக்காக இந்திய அரசாங்கத்தின் பத்மசிறீ விருது பெற்றவர்.[1]
லீலா ஓம்செரி 1928 ஆம் ஆண்டு திருவிதாங்கூரின் திருவ்ட்டாறில் (தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம்) பிறந்தார். இளைய வயதிலேயே தனது சகோதரர், காமுகரா புசோத்தமனுடன் சேர்ந்து கர்னாடக இசைக் குருவான திருவட்டார் ஆறுமுகம் பிள்ளை பாகவதரிடம் இசையைக் கற்றார். இவரது சகோதரர் காமுகரா புருஷோத்தமன் பாரம்பரிய மற்றும் புகழ்பெற்ற பின்னணி பாடகராகவும் இருந்தார்.[2] இசைக்கலைஞர்களின் ஒரு குடும்பத்தில் இருந்து வந்த இவரது தாயாரின் வழிகாட்டுதலின் கீழ் இசை மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
கன்னியாகுமரியில் ஆரம்பக்கல்வி முடிந்த பின், இவர் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் கருநாடக இசையில் பட்டம் பெற்றார். மேலும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இந்துஸ்தானி இசையை படித்து மற்றொரு பட்டம் பெற்றார். சௌதரி சரண் சிங் பல்கலைக்கழகத்திலிருந்து இவர் முதுகலை பட்டம் பெற்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் இசையில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3]
பிரபல எழுத்தாளரான ஓமச்சேரி என். என். பிள்ளையை திருமணம் செய்து கொண்டு புது தில்லியில் தங்கியுள்ளார். இத்தம்பதியருக்கு எஸ். டி. ஓம்சேரி மற்றும் தீப்தி ஒம்சேரி பால்லா என்ற இரண்டு குழந்தைகள் உண்டு. இவர் ஒரு புகழ்பெற்ற பாரம்பரிய நடனக்கலைஞர் ஆவார். மேலும் சில சிறு கதைகளையும் எழுதியுள்ளார்.
லீலா ஓமச்சேரி கேரளாவின், திருவனந்தபுரம், காமுகரா இசைப் பள்ளியில் பேராசிரியராகவும் மற்றும் தில்லி திரிகாலா குருகுலத்தின் முதல்வராகவும், மற்றும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.[4]
இவர் தக்ஷிண பாரதி (தென்னிந்திய மகளிர் அமைப்பு) என்ற அமைப்பின் தலைவராகவும் மற்றும் தில்லியில் உள்ள சுவராலயாவின் துணைத் தலைவராகவும் இருந்தார்
(1964 முதல் 1994 வரை இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராகவும், கருநாடக இசைப் பிரிவில் இசை மற்றும் நுண் கலை ஆசிரியராக பணிபுரிந்தார்.