லென்யாத்திரி (Lenyadri மராத்தி: लेण्याद्री, Leṇyādri) இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே மாவட்டம், ஜுன்னர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடமான ஜுன்னர் நகரத்தின் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த 30 பௌத்த குடைவரைக் கோயில்கள் மற்றும் விநாயகர் கோயில் அமைந்த இடமாகும்.[1] குகை எண் 7இல் லெண்யாத்திரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது.[2] இக்குடைவரைக் கோயில்கள் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. குகை எண் 6 மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களாகவும், மற்றவைகள் விகாரைகளாக அமைந்துள்ளது. (பிக்குகள் தங்குமிடங்கள்)
லென்யாத்திரி குடைவரைக் கோயில்கள் கி.பி முதல் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை ஈனயான பௌத்தர்களால் கட்டப்பட்டதாகும். குகை எண் 7 இல் உள்ள விநாயகர் கோயில் கி.பி முதல் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
லென்யாத்திரி என்பதற்கு மராத்திய மொழியில் மலைக் குகை என்று பொருள்படும்.[3] இக்குகைகள் அமைந்த மலைக்கு கணேசர் மலை என்று அழைப்பர்.
லென்யாத்திரி | |
---|---|
![]() கணேசர் குகைக் கோயில் உட்புறம் | |
மகாராட்டிராவில் லென்யாத்திரியின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: | 19°14′34″N 73°53′8″E / 19.24278°N 73.88556°E |
பெயர் | |
பெயர்: | கிரிஜாட்மஜ், லென்யாத்திரி |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மகாராட்டிரா |
மாவட்டம்: | புனே மாவட்டம் |
அமைவு: | ஜுன்னர்]] அருகில் லென்யாத்திரி குகைகள் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கிரிஜாட்மாஜா எனப்படும் விநாயகர் |
சிறப்பு திருவிழாக்கள்: | விநாயகர் சதுர்த்தி மற்றும் கணேச ஜெயந்தி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | பௌத்த விகார குகை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | கி.பி முதல் நூற்றாண்டு விநாயகர் கோயில் கட்டப்பட்ட ஆண்டு அறியப்படவில்லை. |
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)