வசிபுதீன் தாகர் | |
---|---|
இயற்பெயர் | பயாஸ் வசிபுதீன் தாகர் |
பிறப்பு | 22 April 1968 புது தில்லி |
பிறப்பிடம் | இந்தியா |
தொழில்(கள்) | பாடுதல் |
பயாஸ் வசிபுதீன் தாகர் (Faiyaz Wasifuddin Dagar) துருபத் வகையைச் சேர்ந்த இந்தியப் பாரம்பரிய பாடகர் ஆவார். துருபத் பாடகர் நசீர் பயாசுதின் தாகரின் மகனான இவர் தனது தந்தையின் இறப்பிற்குப் பிறகு தனியாகப் பாடினார். இவருக்கு 2010 இல் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது [1]
வசிபுதீன் தாகர் நசீர் பயாசுதீன் தாகரின் மகனும், தாகர் வானியின் நசீர் சாகிருதீன் தாகரின் மருமகனும் ஆவார். தாகர் ஐந்து வயதிலிருந்தே தனது தந்தை மற்றும் இளைய மாமாவின் கீழ் பெரும்பாலான பயிற்சிகளைப் பெற்றார்.
1989 மற்றும் 1994 க்கு இடையில், இவர் தனது மாமா சாகிருதீன் தாகருடன் சேர்ந்து[2] ஜுகல்பந்திகளைப் பாடினார்.
வாசிபுதீன் தாகரின் பொது வாழ்க்கை 25 பிப்ரவரி 1989 இல் தொடங்கியது. தனது தந்தை இறந்த சில நாட்களுக்குப் பிறகு, தனது முதல் நிகழ்ச்சியை வழங்கினார். தனது மாமா சாகிருதீன் தாகருடன் சேர்ந்தும் பாடினார். 1992 இல் சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் ஜப்பானில் வாசிபுதீனின் முதல் பெரிய நிகழ்வு நடந்தது. பின்னர் சுவிட்சர்லாந்து, இந்தியா மற்றும் அமெரிக்காவில் முக்கிய பதிவுகளை பதிவு செய்துள்ளார். இவர்களது வாழ்க்கை மற்றும் இசையை அடிப்படையாக வைத்து ஒரு பிரெஞ்சு தொலைக்காட்சி நிறுவனம் திரைப்படம் எடுத்தது.
வாசிபுதீன் தாகர் 2000 ஆம் ஆண்டு முதல் வட அமெரிக்காவில் துருபத் தனி இசை நிகழ்ச்சியை நடத்தினார். முதன்முதலில் நியூயார்க்கில் 2000 ஆம் ஆண்டில் நேரலை நிகழ்ச்சியை நடத்தினார். அங்கு பிஹாக் இராக இசையை வழங்கினார். பின்னர் ஐக்கிய நாடுகள் அவை, சிகாகோ நகரம், சுமித்சோனியன் நிறுவனங்கள், வாஷிங்டன் பல்கலைக்கழகம், சியாட்டில், இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், போன்ற பல மதிப்புமிக்க இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார்.