வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி North Kalimantan Communist Party | |
---|---|
Parti Komunis Kalimantan Utara | |
சுருக்கக்குறி | NKCP |
தலைவர் | வென் மிங் சுயான் |
தொடக்கம் |
|
கலைப்பு | 17 அக்டோபர் 1990 |
இளைஞர் அமைப்பு | சரவாக் முற்போக்கு இளைஞர்கள் சங்கம் (SAYA)[2] |
துணை இராணுவப் பிரிவு | |
கொள்கை |
|
அரசியல் நிலைப்பாடு | இடது சாரி |
நிறங்கள் | Red |
வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி (ஆங்கிலம்: North Kalimantan Communist Party (NKCP); மலாய்: Parti Komunis Kalimantan Utara (PKKU); சீனம்: 北加里曼丹共產黨;) என்பது 1971-ஆம் ஆண்டில், மலேசியா, வடக்கு போர்னியோ (சரவாக்) மாநிலத்தில் இயங்கிய ஒரு கம்யூனிச அரசியல் கூட்டணியாகும்.[4]
இந்தக் கட்சி, 19 செப்டம்பர் 1971-இல் நிறுவப்பட்டது. அதற்கு முன், சரவாக் மக்கள் கெரில்லா படை (Sarawak People's Guerilla Force) என்ற பெயரில் இயங்கி வந்தது. வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சியின் தலைவர் வென் மிங் சியுவான் (Wen Ming Chyuan); மற்றும் இந்தக் கட்சி மக்கள் சீனக் குடியரசு நாட்டுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தது.[5][2]
சரவாக்கின் கம்யூனிச கிளர்ச்சியின் போது, வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சியில் இரண்டு முக்கிய இராணுவப் படைகள் உருவாக்கப்பட்டன:
சரவாக்கில் முன்பு சரவாக் விடுதலை இயக்கம் (Sarawak Liberation League) (SLL); சரவாக் முற்போக்கு இளைஞர்கள் சங்கம் (Sarawak Advanced Youths' Association) (SAYA) உட்பட பல கம்யூனிச மற்றும் இடதுசாரி குழுக்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் அவை ஒருங்கிணைக்கப்பட்டன. அதன் மூலம், 1970 மார்ச் மாதம் வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி நிறுவப்பட்டது.[2]
1949-இல் மக்கள் சீனக் குடியரசு (People's Republic of China) நிறுவப்பட்ட பிறகு, சரவாக் வெளிநாட்டுச் சீன சனநாயக இளைஞர் கழகம் (Sarawak Overseas Chinese Democratic Youth League) உருவாக்கப்பட்டது. 1956-ஆம் ஆண்டில், சரவாக் விடுதலை இயக்கம் (Sarawak Liberation League) (SLL) போன்ற பல சிறிய கம்யூனிச குழுக்களை உள்வாங்கி, சரவாக் முற்போக்கு இளைஞர்கள் சங்கம் (Sarawak Advanced Youths' Association) உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் 1971-இல் வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சி (North Kalimantan Communist Party) நிறுவப்பட்டது.[6]
வடக்கு கலிமந்தான் கம்யூனிச கட்சியில், நன்கு பயிற்சி பெற்ற கம்யூனிச பங்கேற்பாளர்கள் 800 - 1,000 பேர் இருந்ததாக அரசாங்க சான்றுகள் மதிப்பிட்டுள்ளன. தவிர சரவாக் கம்யூனிச இயக்கங்களில் ஒட்டு மொத்தமாக 24,000 பங்கேற்பாளர்கள் இருந்ததாகவும் மதிப்பிட்டுள்ளது.
1990 அக்டோபர் 17-ஆம் தேதி, வடக்கு கலிமந்தன் கம்யூனிச கட்சி, சரவாக் மாநில அரசாங்கத்துடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் பின்னர் சர்வாக்கில் நடைமுறையில் இருந்த சரவாக் கம்யூனிச கிளர்ச்சி முறையாக ஒரு முடிவுக்கு வந்தது.[2]