வனபர்த்தி மாவட்டம் (Wanaparthy district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, அக்டோபர், 2016-இல் வனபர்த்தி மாவட்டம நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வனபர்த்தி நகரம் ஆகும்.
4,816.40 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வனபர்த்தி மாவட்டத்தின்[2] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 12,38,660 ஆகும். இம்மாவட்டத்தின் வாகனத் தகடு எண் TS–32 ஆகும்.[3]
வனபர்த்தி மாவட்டம் வனபர்த்தி எனும் ஒரு வருவாய் கோட்டத்தையும், 14 மண்டல்களையும் கொண்டுள்ளது.[4] புதிதாக நிறுவப்பட்ட வனபர்த்தி மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் சுவேதா மெகந்தி ஆவார்.[5]
வனபர்த்தி மாவட்டத்தின் 14 மண்டல்கள் விவரம்:[1]
வ எண். | வனபர்த்தி வருவாய் கோட்டம் |
---|---|
1 | அமரசிந்தா |
2 | ஆத்மகூர் |
3 | சின்னம்பவி |
4 | கான்பூர் |
5 | கோபால்பேட்டை |
6 | கொத்தகொட்டா |
7 | மதனப்பூர் |
8 | பனகல் |
9 | பெப்பெயர் |
10 | பெத்தமந்தடி |
11 | ரெவள்ளி |
12 | ஸ்ரீரங்கப்பூர் |
13 | வேப்பனகந்த்லா |
14 | வனபர்த்தி |