வி. கி. முனுசாமி (V .K. Munusamy) இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுடுமட்பாண்டக் கலைஞராவார். வி. கி. முனுசாமி கிருஷ்ணபக்தர் என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். 1967 ஆம் ஆண்டு சூலை மாதம் 21 ஆம் நாளில் வி.கிருஷ்ணபதர் மற்றும் மங்கலட்சுமி தம்பதியருக்கு மகனாக முனுசாமி பிறந்தார்.[1]
சுடுமட்பாண்டக் கலைத்துறையில் ஆற்றிய சீறிய பணிக்காக 2020 ஆம் ஆண்டு இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[2][3][4][5]
வில்லியனூரை தளமாகக் கொண்ட இக்கலைஞர் பல தலைசிறந்த படைப்புகளை உருவாக்கி பெருமை சேர்த்துள்ளார். உலகின் மிக உயரமான 17 ½ அடி அளவிலான சுடுமண் குதிரை சென்னை அமெரிக்கன் பன்னாட்டுப் பள்ளியில் நிறுவப்பட்டுள்ளது. தென்னிந்திய கோயில்களுக்கு பல சிற்பங்களை உருவாக்கித் தந்துள்ளார். அமெரிக்கா, பிரான்சு, செருமனி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் பல்வேறு பன்னாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். கலை மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாக கோட்டா பழங்குடியினர், சுய உதவிக்குழுக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு சுடுமட்பாண்ட கலையில் பயிற்சி அளித்து வருகிறார்.[6]