வி. ச. பாண்டே | |
---|---|
11வது அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 12 ஜூன் 2003 – 15 திசம்பர் 2004 | |
முதலமைச்சர் | கேகோங்க் அபாங்க் |
முன்னையவர் | அரவிந்த் டேவ் |
பின்னவர் | சைலேந்திர குமார் சிங் |
18வது பீகார் ஆளுநர்களின் பட்டியல் | |
பதவியில் 23 நவம்பர் 1999 – 12 ஜூன் 2003 | |
முதலமைச்சர் | ராப்ரி தேவி நிதிஷ் குமார் |
முன்னையவர் | சூரஜ் பான் (கூடுதல் பொறுப்பு) |
பின்னவர் | இராமா ஜோய்சு |
ஜார்க்கண்ட் ஆளுநர் (கூடுதல் பொறுப்பு) | |
பதவியில் 4 பிப்ரவரி 2002 – 14 ஜூலை 2002 | |
முதலமைச்சர் | பாபுலால் மராண்டி |
முன்னையவர் | பிரபாத் குமார் |
பின்னவர் | இராமா ஜோய்சு |
19வது இந்திய அமைச்சரவைச் செயலாளர் | |
பதவியில் 23 திசம்பர் 1989 – 11 திசம்பர் 1990 | |
பிரதமர் | வி. பி. சிங் |
முன்னையவர் | டி. என். சேஷன் |
பின்னவர் | நரேஷ் சந்திரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அருணாச்சலப் பிரதேச ஆளுஞர் 16 பிப்ரவரி 1932 ஜம்மு, ஜம்மு காஷ்மீர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | 7 பெப்ரவரி 2005 நோய்டா, உத்தரப் பிரதேசம், இந்தியா | (அகவை 72)
இளைப்பாறுமிடம் | அருணாச்சலப் பிரதேச ஆளுஞர் பீகார் ஆளுஞர் |
தேசியம் | இந்தியர் |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம் |
வினோத் சந்திர பாண்டே (V. C. Pande)(16 பிப்ரவரி 1932 - 7 பிப்ரவரி 2005) என்பவர் ராஜஸ்தான் பிரிவு இந்தியக் குடிமைப்பணி ஊழியர் ஆவார். இவர் 1989-1990-ல் அமைச்சரவை செயலாளராக இருந்தார்.
அமைச்சரவை செயலாளர்களாகப் பணியாற்றிய பி. டி. பாண்டே மற்றும் கமல் பாண்டே குடும்பத்தில் காஷ்மீரில் வினோத் சந்திர பாண்டே பிறந்தார். கல்லூரிக் கல்வியினை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
இவர் 23 திசம்பர் 1989 முதல் 11 திசம்பர் 1990 வரை பிரதம மந்திரி வி. பி. சிங்கின் அமைச்சரவைச் செயலாளராக இருந்தார். வி. பி. சிங் முன்னர் நிதி அமைச்சராக இருந்தபோது வருவாய்த் துறைச் செயலாளராக இருந்தார். வி. பி. சிங்கும் வினோத் சந்திர பாண்டேயும் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள்.
பாண்டே பீகார் (1999-2003),[1] ஜார்கண்ட் (2002-ல் குறுகிய காலம்), மற்றும் அருணாச்சலப் பிரதேசம் (2003-04) ஆகியவற்றின் ஆளுநராக அடல் பிகாரி வாச்பாய் அரசாங்கத்தின் நியமனத்தால் பணியாற்றினார்.
திருமணம் முடிக்காமலிருந்த இவர், இந்தி, பாலி, சமசுகிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இந்தியில் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார். அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் இரண்டு மாதம் கழித்து, உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் இவர் இறந்தார்.[2]