வினாயக்ராவ் பட்வர்தன் | |
---|---|
பிறப்பு | 22 சூலை 1898 மீரஜ், இந்தியா |
இறப்பு | 23 ஆகத்து 1975 புனே, இந்தியா | (அகவை 77)
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | பண்டிட் விநாயக் நாராயண் பட்வர்தன் |
பண்டிட் விநாயக் நாராயண் பட்வர்தன் (Vinayakrao Patwardhan) (22 சூலை 1898 - 23 ஆகத்து 1975) இவர் இந்துஸ்தானி இசையின் குவாலியர் கரானாவின் (பாடும் பாணி) இந்தியப் பாடகர் ஆவார். [1]
விநாயக்ராவின் மாமா கேசவ ராவ் கோரட்கர் இவருக்கு முதல் இசை ஆசிரியராக இருந்தார். இவர், 1907 ஆம் ஆண்டில், இலாகூரில் உள்ள கந்தர்வ மகாவித்யாலயாவுக்குச் சென்றார். அங்கு இவருக்கு விஷ்ணு திகம்பர் பலூசுகர் கற்பித்தார்.
இவர், மும்பை, நாக்பூர், இலாகூர் உள்ளிட்ட கந்தர்வ மகாவித்யாலாவின் பல்வேறு கிளைகளில் கற்பித்தல் பணிகளை செய்து வந்தார். இவரது குரல் மக்களிடையே பிரபலமாக இருந்தது. குறிப்பாக நடிகர் / பாடகர் பால கந்தர்வனின் கவனத்தை ஈர்த்தது. ஒரு சந்தர்ப்பத்தில், குவாலியரின் மூத்தக் கலைஞர் கிருட்டிண புவா வாழே புனே பாடகர்களுக்கு ஒரு சவாலை வழங்கினார். இவர், இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, வாழேவிடம் இருந்து சிக்கலான இராகங்களைக் கற்றுக்கொண்டார்.
1940களின் பிற்பகுதியில், பீம்சென் ஜோஷி ஒரு ஆசிரியரைத் தேடியபோது, ஜலந்தரில் இவரை சந்தித்தார். இவர், சவாய் கந்தர்வனிடம் கற்றுக்கொள்ள அறிவுறுத்தினார். பின்னர், மராத்தி இசைக்கலைஞர்களுடன் பணியாற்றினார். பின்னர், கந்தர்வ மகாவித்யாலயாவின் சொந்த கிளையை நிறுவினார்.
இவர், தனது குருவின் மகன் த. வி. பலூசுகர், சுனந்தா பட்நாயக் உட்பட நன்கு அறியப்பட்ட சீடர்களுக்கு பயிற்சி அளித்தார்.
1972இல் இந்தியக் குடியரசுத் தலைவர் இவருக்கு பத்ம பூசண் வழங்கினார். [2] சோவியத் ஒன்றியம் மற்றும் பிற நாடுகளுக்கும் இந்திய கலாச்சாரக் குழுவை வழிநடத்தினார்.