விராதன் (Virādha) வால்மீகி இராமாயண இதிகாசம் கூறும் தண்டகாரண்யத்தில் வாழ்ந்த அரக்கர் ஆவார். வனவாசத்தின் போது சீதையுடன் இராம – இலக்குமணர்கள் தண்டகாரண்யத்தில் வாழ்ந்திருந்த போது விராதன் சீதையை கவர்ந்து சென்றான். இதனை கண்ட இராம-இலக்குமணர்கள் விராதனின் இரண்டு கைகளை வெட்டி, பெரிய குழி வெட்டி உயிருடன் புதைத்தனர்.[1][2]
விராதன் முற்பிறவியில் தும்புரு எனும் கந்தர்வர் ஆவான். குபேரனின் சாபத்தால் அரக்கனாகிக் தண்டகாரண்யம் காட்டில் திரிந்தது வாழ்ந்து, இராமாவதாரத்தின் போது இராமன் கையால் இறந்து, சாபவிமோசனம் பெறும் தன்மை இவனுக்கு இருந்தது. [3][4]