விவாக பஞ்சமி

விவாக பஞ்சமி
கடைபிடிப்போர்இந்துக்கள்
வகைஇந்து
நிகழ்வுவருடாந்திரம்

விவாக பஞ்சமி (Vivaha Panchami) என்பது இராமன், சீதை ஆகிய இருவரின் திருமணத்தை கொண்டாடும் ஒரு இந்து பண்டிகை ஆகும். இது மைதிலி நாட்காட்டியின்படி அக்ரகாயன மாதத்தில் (நவம்பர்-திசம்பர்) சுக்ல பட்சத்தின் ஐந்தாவது நாளிலும், இந்து நாட்காட்டியில் மார்கழி மாதத்திலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியாவிலும், நேபாளத்தின் மிதிலைப் பிரதேசத்திலும் உள்ள இராமனுடன் தொடர்புடைய கோவில்களிலும், புனித இடங்களிலும் "விவாக உத்சவம்" எனக் கொண்டாடப்படுகிறது.

அனுசரிப்புகள்[தொகு]

நேபாளத்தில் உள்ள ஜனக்பூரில் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்தியாவிலிருந்தும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள். ஏனெனில் சீதை இராமனை (அயோத்தியின் இளவரசர்) திருமணம் செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது.[1]

பண்டிகை தேதிகள்[தொகு]

  1. 2010: டிசம்பர் 10
  2. 2014: நவம்பர் 27
  3. 2015: டிசம்பர் 16(புதன்)[2]
  4. 2018: டிசம்பர் 13[3]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Naresh Chandra Sangal; Prakash Sangal (1998). Glimpses of Nepal. APH Publishing. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7024-962-7.
  2. "2015 Vivah Panchami". DrikPanchang. பார்க்கப்பட்ட நாள் 20 February 2015.
  3. "Vivaha panchami, vivaha panchami legend - Festivals of India".