வீரசந்த் ராகவ்ஜி காந்தி | |
---|---|
வீரசந்த் காந்தி | |
பிறப்பு | மகுவா, பவநகர், குஜராத், இந்தியா | 25 ஆகத்து 1864
இறப்பு | 7 ஆகத்து 1901 மகுவார், மும்பை அருகில், இந்தியா | (அகவை 36)
கல்வி | பி. ஏ., சட்டம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மும்பை பல்கலைக்கழகம் |
பணி | வழக்கறிஞர், சமய சமய அறிஞர் |
அறியப்படுவது | 1893ல் சிகாகோவில் நடைபெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் சமண சமயத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர். |
பெற்றோர் | ராகவ் தேஜ்பால் காந்தி |
பிள்ளைகள் | 1 |
கையொப்பம் |
வீரசந்த் ராகவ்ஜி காந்தி (Virachand Raghavji Gandhi) (25 ஆகஸ்டு 1864 – 7 ஆகஸ்டு 1901)[1] வழக்கறிஞரும், சமண சமய அறிஞரும் ஆவார். இவர் 1893ல் அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் நடைபெற்ற உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் சமண சமயத்தின் பிரதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.[2] இவருடன் இந்து சமயத்தின் பிரதிநிதியாக சுவாமி விவேகானந்தர் மற்றும் பௌத்த சமயத்தின் பிரதியாக இலங்கையின் அனகாரிக தர்மபால கலந்து கொண்டனர்.
வீரசந்த் காந்தி சமணம் மட்டுமின்றி பௌத்தம், வேதாந்தம், கிறித்தவம் மற்றும் மேற்குலக தத்துவங்களை கற்றுத் தேர்ந்தவர். காந்தி சமணத்தின் முக்கிய கொள்கையான அகிம்சையை பரப்பினார். இவர் சமணம் மற்றும் பிற சமயங்கள் குறித்தும், சமூகம் மற்றும் பண்பாட்டு வாழ்வியல் குறித்து 555 சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார்.